உலகம் நிறைந்த திராவிடர்கள்
திராவிடர்கள்
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குமரி முனைக்குத் தெற்கே ஆஸ்திரேலியா வரை பரவியிருந்த லெமுரியா என்று தற்கால ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்ட குமரிக் கண்டத்தில் தோன்றி படிப்படியாக முழு மனிதனாக பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்த மக்களை பிற்காலக் கல்வியாளர்கள் திராவிடர்கள் என்று குறிப்பிட்டார்கள்.குமரிக்கண்டம்
திரை ஆவிடர்கள் அதாவது கடலோடிகள் என்ற பொருளில் இவ்வாறு அவர்கள் அழைக்கப் பட்டார் கள்.அதற்குக் காரணம் இருந்தது.
திராவிடர்கள் கடல் பயணச் சாகசங்கள் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள்.இந்த ஆர்வமே அவரகளுக்குத் தூண்டுகோலாய் இருந்து செயற்கரிய சாதனை களைப் புரிந்து இன்றைய உலக வரலாற்றில் ஒரு மிக முக்கிய இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்துள்ளது.
ஆதித் திராவிடன்
காற்றின் பயனையும் அதன் திசைகளையும் நன்கு கணித்துக் கொண்ட அந்த மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்யவல்ல படகுகளைக் கட்டிக்கொண்டு பெருங்கடலை வென்று புதிய உலகங்களைக் காண முற்பட்டார்கள்.அவர்களுடைய ஆற்றலுக்கும் துணிச்சலுக்கும் முன் ஆர்ப்பரிக்கும் அலைகடலும் மண்டியிட்டது.விளைவாக உலகத்தின் புதிய தொலைதூர நிலப்பரப்புகளைக் கண்டுபிடித்து அங்கே கரையிறங்கினார்கள் அம்மக்கள் . குடியேறிய இடங்களில் புதிதான சமுதாய அமைப்புகளை உருவாக்கி நாகரிகத்திலும் மேலோங்கி நின்றார்கள் அவர்கள்.அவர்களின் மொழி தமிழ்.
1920 ஆம் ஆண்டில் சிந்து நதி தீரத்தில் நடந்த மொஹஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாராய்ச்சியின் விளைவாக அங்கே 4500 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மிகச் சிறந்த நாகரிகத்தைக் கொண்ட மக்கள் வாழ்ந்ததை உலகம் அறிந்து கொண்டது.அங்கெ வாழ்ந்த அந்த மக்கள் கமரி நாட்டை கடல் கொள்வதற்கு முன்போ அல்லது கடல் கொண்டதற்குப் பிறகோ அங்கிருந்து கடல் வழிப்பயணம் மேற்கொண்டு தற்போதைய பாகிஸ்தானில் சிந்து நதியின் முகத்துவாரப் பகுதியில் கரை இறங்கியவர்கள்.
அவர்கள் பயிர்த்தொழில் செய்யக் கற்றிருந்தார்கள்.கால்நடைகளைப் பழக்கிப் பயன்படுத்த அறிந்திருந்தார்கள்.சித்திர எழுத்துக்களை உருவாக்கி யிருந்தார்கள்.குளியலறையுடன் கூடிய வீடுகளையும் கழிவு நீர்க் கால்வாய் களையும் அமைக்கும் அளவுக்கு நாகரிகம் அடைந்திருந்தார்கள்.பெரிய நீர்த்தேக்கங்களையும் பிரம்மாண்டமான தானியக் களஞ்சியங்களையும் கட்டுமளவுக்கு செயல் திறனும் பெற்றிருந்தார்கள்.
மெசபடோமியா போன்ற அண்டை நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் கொண்டு ஒரு முன்னேறிய நாகரிக சமுதாயமாக தமிழ் மொழி பேசிய அந்தத் திராவிடர்கள் வாழ்ந்து வந்தபோது வடக்கிலிருந்து ஆரியர்களின் பிரவேசம் நிகழ்ந்தது.
ஆரியக் கடவுள்களும் வழிபாட்டு முறைகளும் சம்ஸ்கிருத மொழியும் திராவிடக் கலாச்சாரத்தோடு இணைந்து கொண்டன.காலப் போக்கில் பெரும்பாலான பண்டைய நாகரீகங்களையும் போல சிந்துவெளி நாகரீகமும் இயற்கை மாறுபாடுகளாலும் வெள்ளப் பெருக்காலும் அழிவுபட்டது.திராவிடர்கள் தென் திசையில் மீண்டும் தம் தாயகம் நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.
மொஹஞ்சதாரோ,ஹரப்பா போல 2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மதுரை நகரம் திட்ட மிட்டுக் கட்டப்பட்டது. மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியப் பேரரசு நிறுவப்பட்டது. மதுரையில் பிரமாண்டமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிர்மாணிக்கப் பட்டது.தமிழகத்துக்கும் நாகத்தீவுக்கும் இடையே வியாபார, கலாசார மற்றும் உறவுப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. நாகத்தீவின் மக்கள் நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.தமிழ் இலக்கண நூலான 'தொல்காப்பியம்' இயற்றப் பட்டது.இலக்கியங்கள் படைக்கப்பட்டன.
ஆதி தமிழர்கள் இயல்பிலேயே அறிவாளிகளாக இருந்தார்கள்.கலை மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக கட்டிடக் கலையில் வல்லுனர்களாக இருந்தார்கள்.அவர்களின் படைப்புகள் யாவும் பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன.
ஆதி தமிழர்கள் இயல்பிலேயே அறிவாளிகளாக இருந்தார்கள்.கலை மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக கட்டிடக் கலையில் வல்லுனர்களாக இருந்தார்கள்.அவர்களின் படைப்புகள் யாவும் பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன.
திரைகடலோடுவதில் தமிழர்கள் மேலும் தேர்ச்சி பெற்றார்கள்.பெரும் அளவிலான பயணிகளோடும் வணிகப் பொருட்களோடும் நெடுந்தொலைவு பயணம் செய்யவல்ல மரக்கலங்கள் கட்டப்பட்டன.அவற்றின் துணையோடு உலகத்தின் மூலை முடுக்குகளைத் தேடி தமிழர்கள் பயணப்பட்டார்கள்.
2300 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக வணிகர்கள் மத்திய தரைக்கடல் வழியாக உரோம நாட்டோடு கடல் வணிகத்தைத் துவங்கி விட்டார்கள். எகிப்து நாட்டில் இறந்தவர்களின் உடலைச் [ மம்மி ] சுற்றி மூடுவதற்கான மெல்லிய துணிகளை தமிழ் வியாபாரிகளே கொண்டு சென்றார்கள். பாபிலோனிய மன்னர் நேபுச்சட்நேசாரின் [ Nebuchadnezzar ] அரண்மனையை தமிழ் நாட்டுத் தேக்கு மரங்களே அலங்கரித்தன.மயில்களும் சந்தனமும் பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. ரோமப்பேரரசின் அரசகுலப் பெண்களின் ஆடம்பர அணிகலன்களில் தூத்துக்குடி முத்துக்களுக்கு முதல் இடம் இருந்தது.
2300 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக வணிகர்கள் மத்திய தரைக்கடல் வழியாக உரோம நாட்டோடு கடல் வணிகத்தைத் துவங்கி விட்டார்கள். எகிப்து நாட்டில் இறந்தவர்களின் உடலைச் [ மம்மி ] சுற்றி மூடுவதற்கான மெல்லிய துணிகளை தமிழ் வியாபாரிகளே கொண்டு சென்றார்கள். பாபிலோனிய மன்னர் நேபுச்சட்நேசாரின் [ Nebuchadnezzar ] அரண்மனையை தமிழ் நாட்டுத் தேக்கு மரங்களே அலங்கரித்தன.மயில்களும் சந்தனமும் பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. ரோமப்பேரரசின் அரசகுலப் பெண்களின் ஆடம்பர அணிகலன்களில் தூத்துக்குடி முத்துக்களுக்கு முதல் இடம் இருந்தது.
1800 ஆண்டு களுக்கு முன்பாக சோழ் நாட்டில் அடிக்கடி நிகழ்ந்த வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்த கரிகால் சோழன் காவிரி ஆற்றின் குறுக்கே வியத்தகு தொழில்நுட்பம் கொண்ட பிரமாண்ட மான கல்லணையை கட்டி சோழ நாட்டை வளமாக்கினான்.
தஞ்சைப் பெரிய கோவில்
தஞ்சைப் பெரிய கோவில்
1000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 10 ஆம் நூற்றாண்டில் உலகின் சிறப்பு மிகுந்த ஆட்சியாளர்களில் ஒருவனான ராஜராஜன் தோன்றினான். தமிழர்களின் எழுச்சி விண்ணைத் தொட்டது. தஞ்சைப் பெரிய கோவில் தமிழரின் பொறித் திறனை உலகுக்குப் பறை சாற்றும் மற்றுமொரு அடையாளமாக எழுந்து நின்றது.
தோணி என்று அழைக்கப்பட்ட தமிழரின் கப்பலைப் பார்த்து அதன் அடிப்படையில் அராபியர்கள் தங்களின் கப்பலைக் கட்டி அதை 'தோ '[Dhow ] என்று அழைத்தார்கள
தமிழர் தோணி
தோணி என்று அழைக்கப்பட்ட தமிழரின் கப்பலைப் பார்த்து அதன் அடிப்படையில் அராபியர்கள் தங்களின் கப்பலைக் கட்டி அதை 'தோ '[Dhow ] என்று அழைத்தார்கள
தமிழர் தோணி
ஓட்டோமான் பேரரசுத் துருக்கி வரையில் சென்று வணிகம் செய்த சோழர்கள் மாற்றுதவியாக துருக்கியர்களை சோழ நாட்டுக்கு அழைக்க
கி பி 1212 ல் முத்துப் பேட்டையில் வந்திறங்கிக் குடியமர்ந்த துருக்கிய வணிகர்களின் மூலமாக இஸ்லாம் தமிழ் மண்ணின் கிழக்குக் கரையில் வேர்விட்டது. அங்கிருந்து ஈழத் தீவுக்கும் பரவியது.
கி பி 1212 ல் முத்துப் பேட்டையில் வந்திறங்கிக் குடியமர்ந்த துருக்கிய வணிகர்களின் மூலமாக இஸ்லாம் தமிழ் மண்ணின் கிழக்குக் கரையில் வேர்விட்டது. அங்கிருந்து ஈழத் தீவுக்கும் பரவியது.
700 ஆண்டுகளுக்கு முன்பு சரியாகச் சொன்னால் கி பி 1311 ல் மதுரை பாண்டிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட வாரிசுச் சண்டையின் விளைவாக இளவரசன் சுந்தர பாண்டியன் வட இந்திய இசுலாமிய படைத் தளபதியான மாலிக்காபூரை உதவிக்கு அழைக்க வடக்கிலிருந்தும்
இஸ்லாம் தமிழ் மண்ணுக்குள் நுழைந்தது.
இவ்வாறு வேற்றுக் கலாசாரங்கள் தமிழர் நாட்டில் வேர் விட்ட நிலையில் நான் , நீ என்ற மேலாண்மைப் போராட்டமும் இங்கே தொடங்கியது. தமிழ் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டார் கள். விளைவாக வடக்கிலிருந்து சாளுக்கியர்கள் ,பல்லவர்கள், மராட்டியர்கள், நவாப்புகள் ஆகிய அன்னியர்கள் தமிழர் நாட்டுக்குள் புகுந்தார்கள். தமிழ்ச் சாம்ராஜ்யங்கள் சரியத் துவங்கின. மெதுவாக ஆட்சி நிர்வாகம் அந்நியர்களின் கைகளுக்கு மாற்றம் பெற்றது.
இஸ்லாம் தமிழ் மண்ணுக்குள் நுழைந்தது.
இவ்வாறு வேற்றுக் கலாசாரங்கள் தமிழர் நாட்டில் வேர் விட்ட நிலையில் நான் , நீ என்ற மேலாண்மைப் போராட்டமும் இங்கே தொடங்கியது. தமிழ் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டார் கள். விளைவாக வடக்கிலிருந்து சாளுக்கியர்கள் ,பல்லவர்கள், மராட்டியர்கள், நவாப்புகள் ஆகிய அன்னியர்கள் தமிழர் நாட்டுக்குள் புகுந்தார்கள். தமிழ்ச் சாம்ராஜ்யங்கள் சரியத் துவங்கின. மெதுவாக ஆட்சி நிர்வாகம் அந்நியர்களின் கைகளுக்கு மாற்றம் பெற்றது.
மாயர்கள் [ mayan ]
வணிக நோக்கமல்லாது வேறு சிந்தனைகளைக் கொண்ட மிகுந்த துணிச்சலும் உத்வேகமும் கொண்ட, பிற்காலத்தில் உலகமெல்லாம் வியந்து பேசப்போகின்ற ஒரு புதிய நாகரீகத்தை தோற்றுவிக்கப் போகிற தமிழ்த் திராவிடர்களின் குழு ஒன்று தமிழர் நாட்டிலிருந்து புறப்பட்டு மாபெருங்கடல்களைத் தாண்டிச் சென்று வளமிக்க ஒரு நிலப்பரப்பைக் கண்டுபிடித்தது.இதற்கு முன்பாகவே இவர்கள் அங்கே போய் வந்திருக்க வேண்டும்.
பிற்காலத்தில் நடந்ததையெல்லாம் பார்த்தால் அவர்கள் தாங்கள் சென்றடையப் போகின்ற இடம் எது என்பதை அறிந்து கொண்டுதான் பயணத்தைத் துவங்கினார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பிற்காலத்தில் நடந்ததையெல்லாம் பார்த்தால் அவர்கள் தாங்கள் சென்றடையப் போகின்ற இடம் எது என்பதை அறிந்து கொண்டுதான் பயணத்தைத் துவங்கினார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
இந்தோனேசிய நாடு தமிழரின் ஆட்சியிலிருந்தபோது கட்டப்பட்ட chandi sukuh ஹிந்துக் கோவில் எல்லாவிதத்திலும் மாயர்களின் கோவிலை ஒத்திருக்கிறது.
chandi sukuh ஹிந்துக் கோவில் இந்தோனேசியா
chandi sukuh ஹிந்துக் கோவில் இந்தோனேசியா
14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் தமிழர்களின் தோணி யின் புதுவடிவமான கேரவல் கப்பல்களில் ஏறி செல்வத்தையும் புதிய வளங்களையும் தேடி நாலாதிசைகளிலும் கடல்பயணங்களை மேற்கொண்டார்கள். மாயர்களின் தங்கப் புதையலைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் தேடிச் சென்ற Hermon Cortez என்ற ஸ்பெயின் நாட்டுத் தளபதி கடைசியாக மாயர்களின் மண்ணில் இறங்கி Montezuma என்ற கடைசி மாயன் அரசனை வஞ்சகமாக வீழ்த்தி மாயன் மக்களைக் கொன்று குவித்தான்.மாயர்களின் கலாசாரப் பொக்கிஷங்களையும் விடாமல் அழித்து முடித்தார்கள். தப்பிப் பிழைத்த சிலவை தான் நமக்குக் கிடைத்தன.மாயன் மக்கள் தங்களின் தனித்துவங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும் இழந்து சாதாரண மக்கள் ஆனார்கள்.
ஆஸ்திரேலியப் பழங்குடிகள்
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
தற்போதைய ஆஸ்திரேலிய நிலப்பகுதி கடல்கோளால் குமரி நாட்டிலிருந்து துண்டிக்கப் பட்டதால் அங்கே வாழ்ந்த திராவிடர்கள் பிரதான இனத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார்கள்.திராவிடச் சமுதாயத்தில் ஏற்பட்ட வியத்தகு நாகரிகமும் முன்னேற்றங்களும் மொழியறிவும் அவர்களிடம் சென்று சேரவில்லை.பழங்குடிகளாகவே பின்தங்கிப் போனார்கள்.தரணி போற்றும் தமிழராக ஆகியிருக்க வேண்டிய மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆடை அணியக்கூட அறிந்திராத ஆதிவாசிகளாகவே இருந்தார்கள்.
தற்போதைய ஆஸ்திரேலிய நிலப்பகுதி கடல்கோளால் குமரி நாட்டிலிருந்து துண்டிக்கப் பட்டதால் அங்கே வாழ்ந்த திராவிடர்கள் பிரதான இனத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார்கள்.திராவிடச் சமுதாயத்தில் ஏற்பட்ட வியத்தகு நாகரிகமும் முன்னேற்றங்களும் மொழியறிவும் அவர்களிடம் சென்று சேரவில்லை.பழங்குடிகளாகவே பின்தங்கிப் போனார்கள்.தரணி போற்றும் தமிழராக ஆகியிருக்க வேண்டிய மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆடை அணியக்கூட அறிந்திராத ஆதிவாசிகளாகவே இருந்தார்கள்.
மிஞ்சிப் பிழைத்தவர்களின் சந்ததிகள் இன்று தனித்த அடையாளம் எதுவுமின்றி Aborigines என்ற பெயரில் வாழ்ந்து வருகிறார்கள்.
அமெரிக்கச் செவ்விந்தியர்கள் [ Red Indians ]
அண்மையில் அமெரிக்க மற்றும் பிரேசில் நாட்டுக் கல்வியாளர்கள் வெளியிட்ட ஆய்வு ஒன்று செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் இதுவரை கருதி வந்தபடி மங்கோலியர்இனத்தவர் அல்ல. அவர்கள் ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் .இவர்கள் கொலம்பசுக்கும் முன்பாக 14000 ஆண்டுகளுக்கு முன்பே புதிய உலகம் என்று சொல்லப்பட்ட இன்றைய அமெரிக்காவை முதன் முதலில் சென்றடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது.அதாவது நமது சித்தாந்தத்தின்படி அமெரிக்கச் செவ்விந்தியரும் குமரி நாட்டிலிருந்து கிளம்பிச் சென்ற உலகின் முதல் கடலோடிகளான திராவிடர்களேயாவார்கள்.
அமெரிக்கப் பழங்குடித் திராவிடன் [Apache indian ]
மெக்சிகோ வரையிலும் சென்று குடியேறி மாயர்களாகக் கோலோச்சிய திராவிடர்களுக்கு அருகிலேயே இருக்கின்ற அமெரிக்காவுக்குள் நுழைவதில் என்ன சிரமம் இருந்திருக்கப் போகிறது?
தேடிப் பார்த்தால் நாமெல்லாம் வியக்கும் வகையில் உலகம் முழுவதும் திராவிடர்கள் தங்களின் உண்மை முகங்களைத் தொலைத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து போய்க் கிடக்கிறார்கள்.
என்றாலும் மறுபடி ஒருநாள் மீண்டும் நாம் எழுச்சி பெறுவோம் என்ற நம்பிக்கையோடு பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு தமிழினம் காத்திருக்கிறது.
'கே.பி.சுந்தராம்பாள் -சுருக்கமான வரலாறு' படிக்க சொடுக்குக http://thenpothikai.blogspot.in/2012/09/blog-post.html