சனி, 23 ஜூன், 2012


                         உலகம் நிறைந்த திராவிடர்கள்  

                        திராவிடர்கள் 

 பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு குமரி முனைக்குத் தெற்கே ஆஸ்திரேலியா வரை பரவியிருந்த லெமுரியா என்று தற்கால ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்ட குமரிக் கண்டத்தில் தோன்றி படிப்படியாக முழு மனிதனாக பரிணாம வளர்ச்சி பெற்று வாழ்ந்த மக்களை பிற்காலக் கல்வியாளர்கள்  திராவிடர்கள் என்று குறிப்பிட்டார்கள். 

குமரிக்கண்டம் 
திரை ஆவிடர்கள் அதாவது கடலோடிகள் என்ற பொருளில் இவ்வாறு அவர்கள் அழைக்கப் பட்டார் கள்.அதற்குக் காரணம் இருந்தது.

திராவிடர்கள் கடல் பயணச் சாகசங்கள் செய்வதில் ஆர்வமுள்ளவர்களாய் இருந்தார்கள்.இந்த ஆர்வமே அவரகளுக்குத் தூண்டுகோலாய் இருந்து செயற்கரிய சாதனை களைப் புரிந்து இன்றைய உலக வரலாற்றில் ஒரு மிக முக்கிய இடத்தைப் பிடிக்க காரணமாக இருந்துள்ளது.                                      
                                                                                                                           ஆதித் திராவிடன் 
காற்றின் பயனையும் அதன் திசைகளையும் நன்கு கணித்துக் கொண்ட அந்த மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்யவல்ல படகுகளைக் கட்டிக்கொண்டு பெருங்கடலை வென்று புதிய உலகங்களைக் காண முற்பட்டார்கள்.அவர்களுடைய ஆற்றலுக்கும் துணிச்சலுக்கும் முன் ஆர்ப்பரிக்கும் அலைகடலும் மண்டியிட்டது.விளைவாக உலகத்தின் புதிய தொலைதூர நிலப்பரப்புகளைக் கண்டுபிடித்து அங்கே கரையிறங்கினார்கள் அம்மக்கள் . குடியேறிய இடங்களில் புதிதான சமுதாய அமைப்புகளை உருவாக்கி நாகரிகத்திலும் மேலோங்கி நின்றார்கள் அவர்கள்.அவர்களின் மொழி தமிழ். 

1920 ஆம் ஆண்டில் சிந்து நதி தீரத்தில் நடந்த மொஹஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வாராய்ச்சியின் விளைவாக அங்கே 4500 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு மிகச் சிறந்த நாகரிகத்தைக் கொண்ட மக்கள் வாழ்ந்ததை உலகம் அறிந்து கொண்டது.அங்கெ வாழ்ந்த அந்த மக்கள் கமரி நாட்டை கடல் கொள்வதற்கு முன்போ அல்லது கடல் கொண்டதற்குப் பிறகோ அங்கிருந்து கடல் வழிப்பயணம் மேற்கொண்டு தற்போதைய பாகிஸ்தானில் சிந்து நதியின் முகத்துவாரப் பகுதியில் கரை இறங்கியவர்கள்.

அவர்கள் பயிர்த்தொழில் செய்யக் கற்றிருந்தார்கள்.கால்நடைகளைப் பழக்கிப் பயன்படுத்த அறிந்திருந்தார்கள்.சித்திர எழுத்துக்களை உருவாக்கி யிருந்தார்கள்.குளியலறையுடன் கூடிய வீடுகளையும் கழிவு நீர்க் கால்வாய் களையும் அமைக்கும் அளவுக்கு நாகரிகம் அடைந்திருந்தார்கள்.பெரிய நீர்த்தேக்கங்களையும் பிரம்மாண்டமான தானியக் களஞ்சியங்களையும் கட்டுமளவுக்கு செயல் திறனும் பெற்றிருந்தார்கள்.



ஆரியக் கடவுள்களும் வழிபாட்டு முறைகளும் சம்ஸ்கிருத மொழியும் திராவிடக் கலாச்சாரத்தோடு இணைந்து கொண்டன.காலப் போக்கில் பெரும்பாலான பண்டைய நாகரீகங்களையும் போல சிந்துவெளி நாகரீகமும் இயற்கை மாறுபாடுகளாலும் வெள்ளப் பெருக்காலும் அழிவுபட்டது.திராவிடர்கள் தென் திசையில் மீண்டும் தம் தாயகம்  நோக்கி இடம் பெயர்ந்தார்கள். 

இதற்கிடையில் இயற்கையின் கொடிய சீற்றத்தால் பொங்கி எழுந்த ஆழிப்பேரலைகள் குமரி நாட்டைச் சூழ்ந்துகொண்டு அதன்  பெரும் பகுதி நிலப்பரப்பை விழுங்கியிருந்தன. அழிந்துபட்ட குமரி நாட்டின் எஞ்சிய பகுதிகளான பாரதத்தின் தென் முனையிலும் நாகத்தீவு எனப்பட்ட இலங்கை வரையிலும் பரவி வாழ்ந்த திராவிட மக்கள் தமிழர்கள் ஆனார்கள். தமிழரின் நாடு உருவானது.

மொஹஞ்சதாரோ,ஹரப்பா போல  2500 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் மதுரை நகரம் திட்ட மிட்டுக் கட்டப்பட்டது.  மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியப் பேரரசு நிறுவப்பட்டது. மதுரையில்  பிரமாண்டமான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் நிர்மாணிக்கப் பட்டது.தமிழகத்துக்கும்  நாகத்தீவுக்கும் இடையே வியாபார, கலாசார மற்றும் உறவுப் பரிமாற்றங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. நாகத்தீவின்  மக்கள் நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள். மதுரையில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டது.தமிழ் இலக்கண நூலான 'தொல்காப்பியம்' இயற்றப் பட்டது.இலக்கியங்கள் படைக்கப்பட்டன.

ஆதி தமிழர்கள் இயல்பிலேயே அறிவாளிகளாக இருந்தார்கள்.கலை மற்றும் இலக்கியங்களில் ஆர்வம் கொண்டிருந்தார்கள். மிக முக்கியமாக கட்டிடக் கலையில் வல்லுனர்களாக இருந்தார்கள்.அவர்களின் படைப்புகள் யாவும் பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் இருந்தன.

திரைகடலோடுவதில் தமிழர்கள் மேலும் தேர்ச்சி பெற்றார்கள்.பெரும் அளவிலான பயணிகளோடும் வணிகப் பொருட்களோடும் நெடுந்தொலைவு பயணம் செய்யவல்ல மரக்கலங்கள் கட்டப்பட்டன.அவற்றின் துணையோடு உலகத்தின் மூலை முடுக்குகளைத் தேடி தமிழர்கள் பயணப்பட்டார்கள்.

2300 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழக  வணிகர்கள் மத்திய தரைக்கடல் வழியாக உரோம நாட்டோடு கடல் வணிகத்தைத் துவங்கி விட்டார்கள். எகிப்து நாட்டில் இறந்தவர்களின் உடலைச் [ மம்மி ] சுற்றி மூடுவதற்கான மெல்லிய துணிகளை தமிழ் வியாபாரிகளே கொண்டு சென்றார்கள். பாபிலோனிய மன்னர் நேபுச்சட்நேசாரின் [ Nebuchadnezzar ] அரண்மனையை தமிழ் நாட்டுத் தேக்கு மரங்களே அலங்கரித்தன.மயில்களும் சந்தனமும் பாபிலோனுக்குக் கொண்டுசெல்லப்பட்டன. ரோமப்பேரரசின் அரசகுலப் பெண்களின் ஆடம்பர அணிகலன்களில் தூத்துக்குடி முத்துக்களுக்கு முதல் இடம் இருந்தது.

 தமிழகத்தில் சேர, சோழப் பேரரசுகள் அமைக்கப்பட்டன. அடுத்து நாகத்தீவில் ஈழத் தமிழ் அரசுகள் அமைக்கப்பட்டன. சங்க காலத்தைச் சேர்ந்த  பாரி, அதியமான் ஆகிய குறுநில மன்னர்கள் கொடைத் தன்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தார்கள். இவர்களின் காலத்தில் முதலாம் அவ்வையார் என்ற பெண் புலவர் சீர் பெற்றுத் திகழ்ந்தார்.

  1000 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 10 ஆம் நூற்றாண்டில் உலகின் சிறப்பு மிகுந்த ஆட்சியாளர்களில் ஒருவனான ராஜராஜன் தோன்றினான். தமிழர்களின் எழுச்சி விண்ணைத் தொட்டது. தஞ்சைப் பெரிய கோவில் தமிழரின் பொறித் திறனை உலகுக்குப் பறை சாற்றும் மற்றுமொரு அடையாளமாக எழுந்து நின்றது.

தோணி என்று அழைக்கப்பட்ட தமிழரின் கப்பலைப் பார்த்து அதன் அடிப்படையில் அராபியர்கள் தங்களின் கப்பலைக் கட்டி அதை 'தோ '[Dhow ] என்று அழைத்தார்கள
                                                                                                                தமிழர் தோணி 
சோழ சாம்ராஜ்யம் வடக்கே கலிங்கத்துக்கு அப்பாலும்  விரிந்து பரந்திருந்தது. ராஜ ராஜ சோழனின் மகனான ராஜேந்திர சோழன் மிகச்சிறந்த உலகின் முதல் கடற்படையை அமைத்திருந்தான்.அதன் பலனாக இன்றைய தென்கிழக்கு ஆசிய நாடுகள் [ ஸ்ரீவிஜயம்,பண்ணை [இந்தோனேசியாவிலுள்ள சுமத்ரா ],மலையூர் [மலாயா ], ,மாப்பாலம்,நிலமுரிதேசம், தலைத்தகோலம் மணககாவரம், .மடம லிங்கம், கடாரம் [கெடா ], மேவிலம்பங்கம்]அனைத்தையும் வென்று ஆட்சி புரிந்தான்..இன்றும் இந்தோனேசியா விலுள்ள சிறிய பாலித்தீவில் 2000 க்கு மேற்பட்ட இந்துக்கோவில்கள் உள்ளன. பெரும்பான்மையான  தமிழர்களும் வாழ்ந்து வருகிறார்கள்.


800 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது கி பி 875ல் எகிப்து  நாட்டில் ஏற்பட்ட அரசியல் கலவரங்களிலிருந்து தப்பிக்க அங்கிருந்து கப்பலேறி வந்து அன்றைய கொற்கை துறைமுகத்தில் இறங்கிய 224 அரபு பக்ரி இனப் பழங்குடி மக்களை பாண்டிய மன்னன் அபிராம ராஜ ஆதி ராஜராஜா ஜெயவீர ராஜூகர் வரவேற்று இடம் அளித்து வணிகம் செய்ய அனுமதியும் வழங்கினான், மீண்டும் கி பி 1284 ல் சையத் ஜமாலுதீன் தலைமையில் வந்திறங்கிய அராபியர்களை  மன்னன் சுந்தரபாண்டியன் ஆதரித்தான். இதன் மூலமாக தமிழ் மண்ணின் மேற்குக்  கரையில்  முதல் இஸ்லாம் மதக் குடியேற்றம் நிகழ்ந்தது.

ஓட்டோமான் பேரரசுத் துருக்கி வரையில் சென்று வணிகம் செய்த சோழர்கள் மாற்றுதவியாக துருக்கியர்களை சோழ நாட்டுக்கு அழைக்க 
கி பி 1212 ல் முத்துப் பேட்டையில்  வந்திறங்கிக் குடியமர்ந்த துருக்கிய வணிகர்களின் மூலமாக இஸ்லாம் தமிழ் மண்ணின் கிழக்குக்  கரையில்  வேர்விட்டது. அங்கிருந்து ஈழத் தீவுக்கும் பரவியது.

700 ஆண்டுகளுக்கு முன்பு சரியாகச் சொன்னால் கி பி 1311 ல் மதுரை பாண்டிய அரச குடும்பத்தில் ஏற்பட்ட வாரிசுச் சண்டையின் விளைவாக இளவரசன் சுந்தர பாண்டியன் வட இந்திய இசுலாமிய படைத் தளபதியான மாலிக்காபூரை உதவிக்கு அழைக்க வடக்கிலிருந்தும் 
இஸ்லாம் தமிழ் மண்ணுக்குள் நுழைந்தது.

இவ்வாறு வேற்றுக் கலாசாரங்கள் தமிழர் நாட்டில் வேர் விட்ட நிலையில் நான் , நீ என்ற மேலாண்மைப் போராட்டமும்  இங்கே தொடங்கியது. தமிழ் மன்னர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டார் கள். விளைவாக வடக்கிலிருந்து சாளுக்கியர்கள் ,பல்லவர்கள், மராட்டியர்கள், நவாப்புகள் ஆகிய அன்னியர்கள் தமிழர் நாட்டுக்குள் புகுந்தார்கள். தமிழ்ச் சாம்ராஜ்யங்கள் சரியத் துவங்கின.  மெதுவாக ஆட்சி நிர்வாகம் அந்நியர்களின் கைகளுக்கு மாற்றம்  பெற்றது. 

 600 ஆண்டு களுக்கு முன்பு ஆதித் தமிழரின் கப்பலான  'தோணி' இலிருந்து உருவான அராபியரின் 'தோ'வின் தொழில் நுட்பத் திறனைக் கண்டு கொண்ட ஐரோப்பியர்கள் அதைச் சிறிது  மேம்படுத்தி கேரவல் [caravel ]   என்ற தங்களின் சொந்தக் கப்பலை உருவாக்கினார்கள். புதிய நிலப் பிரதேசங்களை குறிப்பாக இந்தியா மற்றும் தமிழர் நாட்டின் எல்லை யில்லாச் சிறப்புகளை அறிந்த ஐரோப்பியர்கள் அதற்கு கடல் வழியைக் கண்டுபிடிக்கும்  ஆர்வத்தோடு இந்தக் கேரவல்





 500 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பியர்கள் தமிழர் மண்ணில் வந்து இறங்கினார்கள்.தமிழர்களிடையே நிலவிய ஒற்றுமை இன்மையும் ஆதிக்கச் சண்டைகளும் வந்தவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. ஆங்கிலேய ஆளுமை தமிழர் நாட்டையும் சுற்றி வளைத்தது.அடுத்தடுத்த பல்வேறு அந்நியக் கலாசாரங்களின்   ஆக்கிர மிப்புகளால் தமிழரின் தனித்தன்மைகளும் சிறப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாகக் குன்றிப் போயின.  ஆண்ட இனம் அடிமையாகிப் போனது. 



                                      மாயர்கள் [ mayan ]


வணிக நோக்கமல்லாது வேறு சிந்தனைகளைக் கொண்ட மிகுந்த துணிச்சலும் உத்வேகமும் கொண்ட, பிற்காலத்தில் உலகமெல்லாம் வியந்து பேசப்போகின்ற  ஒரு புதிய நாகரீகத்தை தோற்றுவிக்கப் போகிற தமிழ்த் திராவிடர்களின் குழு ஒன்று தமிழர் நாட்டிலிருந்து புறப்பட்டு மாபெருங்கடல்களைத் தாண்டிச் சென்று வளமிக்க ஒரு நிலப்பரப்பைக் கண்டுபிடித்தது.இதற்கு முன்பாகவே இவர்கள் அங்கே  போய் வந்திருக்க வேண்டும்.

பிற்காலத்தில் நடந்ததையெல்லாம் பார்த்தால் அவர்கள் தாங்கள் சென்றடையப் போகின்ற இடம் எது என்பதை அறிந்து கொண்டுதான் பயணத்தைத் துவங்கினார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.


அங்கே Chetumal ல் தொடங்கிய ஆதித் தமிழர்களின் குடியேற்றம்  மாயன் நாகரீகமாக தென் அமெரிக்கா முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக பரந்து விரியத் தொடங் கியது..மாயா என்பது முழுக்க முழுக்க ஒரு இந்தியச் சொல் மட்டுமல்லாது தமிழ்ச் சொல்லும் கூட. அழிந்து போன குமரிக்கண்டத்தில் இடைத் தமிழ்ச் சங்கத்தில் இருந்த சிற்பியின் பெயர் மயன்.இவரே தமிழர் சிற்பக் கலையின் தந்தையும் ஆவார்  .மாயன் என்பது தற்போதும் புழக்கத்தில் இருக்கின்ற தூய தமிழ்ப் பெயர் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். 

ஏற்கனவே நாகரீகம் அடைந்திருந்த மாயர்கள் இயற்கை வளமிக்க அந்தப் பூமியில் பயிர்த் தொழிலைத் தொடங்கினார்கள்.ஒரு அரசனின் தலைமையின் கீழ் சிறந்த நிர்வாக அமைப்பை உருவாக்கினார்கள் தமிழரை போலவே மாயா பெண்கள் விடிகாலை எழுந்து வீட்டு வேலைகளைச் செய்ய ஆண்கள் வயலுக்குச் சென்று மாலை வீடு திரும்பினார்கள்.அவர்களுடைய ஒரு பிரதான உணவின் பெயர் tamalae. உயிர் காக்கும் உணவுக்கும் தாய்மொழியின் பெயர். 











மாயர்கள் தமிழ் மற்றும் இந்துக் கலாசாரத்தின்படி கடவுளுக்கு படையல் போட்டு மலர்கள் தூவி ஊதுவத்தி ஏற்றி வழிபட்டார்கள். மொஹஞ்ச தாரோ அகழ்வில் நெற்றியில் கூந்தல் வகிட்டின்  மத்தியில் சிவப்புப் பொட்டைக் கொண்ட ஒரு பெண்ணின் சுதை வடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  அங்கிருந்து தொடர்ந்த தமிழரின் இந்த நெற்றிப் பொட்டுக் கலாசாரம் மாயர்களின் பண்பாட்டிலும் இடம் பெற்றிருந்தது. மிகுந்த ஆய்வுக்குப்பின் உருவாக்கப்பட்ட மாயர்களின் வாழ்க்கையை விவரிக்கின்ற மெல் கிப்சனின் [ Mel kibson ] 'Apocalypto' திரைப்படத்தின் கதாநாயகியை நெற்றியில் பொட்டிட்டிருந்த ஒரு திராவிடப் பெண்ணாகப் படைத்திருந்த விதமே இந்தக் கருத்துக்கு இன்னும் வலு சேர்க்கிறது.
















'எனது பாட்டனார்  காலத்தில் நாகர் [திராவிடர்-தமிழர்] இனத்தைச் சேர்ந்த ஒட்டன் என்பவர் கிழக்குத் திசையிலிருந்து ஏழு குழுக்களாக மக்களை இங்கு அழைத்து வந்தார் .ஆனால் அதற்கும் முன்பாகவே இரண்டு பேர் இங்கு மக்களை அழைத்து வந்து குடியேற்றிவிட்டார்கள்' என்று ஒரு மாயன் இனத்து மூத்த மனிதர் தன்னிடம் சொன்னதாக இயேசு சபையைச் சேர்ந்த Francisco Xavier Clavigero என்னும் பாதிரியார் தனது Ancient history of Mexico என்னும் நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.  

தமிழருக்கும் முன்பு அங்கே குடியேறி இருந்தவர்கள் துருக்கியிலிருந்து  வந்தவர்கள். அவர்கள் olmecs அல்லது olman என்று அழைக்கப் பட்டார்கள். பண்டைய துருக்கிய  மொழியும் சமஸ்கிருதமும் தமிழும் கலந்து பிற்காலத்தில் அது திரிபு பெற்று மாயர்களின் புதிய மொழி உருவானது. Nahuas [நாகர் ] என்று அழைக்கப்பட்ட தனி இனக்குழுவும் உருவானது. அவர்கள் நாகாதி [ Nahuati ]என்ற மொழியில் பேசினார்கள் [ இந்த Nahuas இனப் பழங்குடி மக்கள் இன்றும் மெக்சிகோ நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். ]



இரண்டாம் நூற்றாண்டில் மாயர்கள் மேலாண்மை பெற்று தனிச் சமுதாயமாக உருவெடுத்தார்கள்.இன்றைய கவுதமாலா நாட்டின் வடபகுதியில் Tikal நகரத்தை மையமாகக் கொண்டு மாயன் அரசு சிறப்புற்றுத் திகழ்ந்தது. கணிதத்திலும் வானவியலிலும் மாயர்கள் மிகுந்த நிபுணத்துவம் பெற்றார்கள்.இந்தியப் பஞ்சாங்கத்தைப் போல மாயர்கள் உருவாக்கிய நாட்குறிப்பு தற்காலத்தில் உலகத்தின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்துள்ளது.  

13ஆம் நூற்றாண்டுகளில் தமிழர் நாட்டில் தமிழர்களின் வீழ்ச்சி துவங்கிய அதே காலத்தில்  மாயர்களின் உலகில் அவர்களின் வீழ்ச்சியின் துவக்கம் புலப்படத் தொடங்கியது. போட்டிக் குழுக்களிடையே ஏற்பட்ட விரோதமும் விவசாயத்திலும் வணிகத்திலும்  ஏற்பட்ட சரிவும் அந்த வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.மாயர்கள் தங்களின் நகரங்களைக் கைவிட்டு இடம் பெயர்ந்தார்கள். மாயன் சமுதாயம் சிதறிப்போனது.

14 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பியர்கள் தமிழர்களின் தோணி யின் புதுவடிவமான கேரவல்  கப்பல்களில் ஏறி செல்வத்தையும் புதிய வளங்களையும் தேடி நாலாதிசைகளிலும் கடல்பயணங்களை மேற்கொண்டார்கள். மாயர்களின் தங்கப் புதையலைப்  பற்றிக்  கேள்விப்பட்டு அதைத் தேடிச் சென்ற Hermon Cortez என்ற ஸ்பெயின் நாட்டுத் தளபதி கடைசியாக மாயர்களின் மண்ணில் இறங்கி Montezuma என்ற கடைசி மாயன் அரசனை வஞ்சகமாக வீழ்த்தி மாயன் மக்களைக் கொன்று குவித்தான்.மாயர்களின் கலாசாரப் பொக்கிஷங்களையும் விடாமல் அழித்து முடித்தார்கள்.  தப்பிப் பிழைத்த சிலவை தான் நமக்குக் கிடைத்தன.மாயன் மக்கள் தங்களின் தனித்துவங்களையும் வரலாற்றுப் பெருமைகளையும்  இழந்து சாதாரண மக்கள் ஆனார்கள்.

இன்றும் அவர்கள் மெக்சிகோ நாட்டிலும் மத்திய அமெரிக்க நாடுகளிலும் மற்ற மக்களோடு மக்களாகக் கலந்து  வாழ்ந்து வருகிறார்கள். தற்காலத்தில் மெக்சிகோ நாட்டில் வாழும் புதிய தலைமுறைப் பழங்குடி மக்கள் இந்துக்களான தாங்கள் கட்டாயமாக மதம் மாற்றப்பட்ட நிகழ்வை தங்களின் குடும்பத்து முன்னோர்கள் தங்களிடம் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள்.











                ஆஸ்திரேலியப் பழங்குடிகள் 

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
தற்போதைய ஆஸ்திரேலிய நிலப்பகுதி கடல்கோளால் குமரி நாட்டிலிருந்து துண்டிக்கப் பட்டதால் அங்கே  வாழ்ந்த திராவிடர்கள் பிரதான இனத்திடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார்கள்.திராவிடச் சமுதாயத்தில் ஏற்பட்ட வியத்தகு நாகரிகமும் முன்னேற்றங்களும் மொழியறிவும்  அவர்களிடம் சென்று சேரவில்லை.பழங்குடிகளாகவே பின்தங்கிப் போனார்கள்.தரணி போற்றும் தமிழராக ஆகியிருக்க வேண்டிய மக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் ஆடை அணியக்கூட அறிந்திராத ஆதிவாசிகளாகவே இருந்தார்கள்.




                     அமெரிக்கச் செவ்விந்தியர்கள் [ Red Indians ]

அண்மையில் அமெரிக்க மற்றும் பிரேசில் நாட்டுக் கல்வியாளர்கள் வெளியிட்ட ஆய்வு ஒன்று செவ்விந்தியர்கள் என்று அழைக்கப்பட்ட அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் இதுவரை கருதி வந்தபடி மங்கோலியர் 
இனத்தவர் அல்ல. அவர்கள் ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் .இவர்கள் கொலம்பசுக்கும் முன்பாக 14000 ஆண்டுகளுக்கு முன்பே புதிய உலகம் என்று சொல்லப்பட்ட  இன்றைய அமெரிக்காவை முதன் முதலில் சென்றடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறது.அதாவது நமது சித்தாந்தத்தின்படி அமெரிக்கச் செவ்விந்தியரும் குமரி நாட்டிலிருந்து கிளம்பிச் சென்ற உலகின் முதல் கடலோடிகளான திராவிடர்களேயாவார்கள்.

                                    அமெரிக்கப் பழங்குடித் திராவிடன் [Apache indian ]    
                                                                      
மெக்சிகோ வரையிலும் சென்று குடியேறி மாயர்களாகக் கோலோச்சிய திராவிடர்களுக்கு அருகிலேயே இருக்கின்ற  அமெரிக்காவுக்குள் நுழைவதில் என்ன சிரமம் இருந்திருக்கப் போகிறது?

தேடிப்  பார்த்தால்  நாமெல்லாம் வியக்கும் வகையில் உலகம் முழுவதும் திராவிடர்கள் தங்களின் உண்மை முகங்களைத் தொலைத்துவிட்டு கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து போய்க் கிடக்கிறார்கள். 


என்றாலும்  மறுபடி ஒருநாள்  மீண்டும் நாம்  எழுச்சி பெறுவோம்  என்ற நம்பிக்கையோடு பழம்பெருமைகளைப் பேசிக்கொண்டு தமிழினம் காத்திருக்கிறது.  









எழில் மிகு எல்லோரா 
 'படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/07/blog-post.html













'கே.பி.சுந்தராம்பாள் -சுருக்கமான வரலாறு' படிக்க சொடுக்குக  http://thenpothikai.blogspot.in/2012/09/blog-post.html





சனி, 16 ஜூன், 2012

பசுமை நிறைந்த நினைவுகளே

                                    பசுமை நிறைந்த நினைவுகளே
  
                     நினைவு -1
                                      குலவை 


தென் தமிழ் நாட்டுக் கிராமங்களில் பருவ மழைக்குப் பின் விவசாயிகள் ஆடி மாதத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கு வார்கள்.பாவி வைத்த நெல்நாற்று பருவமடைந் ததும் ஆண்கள் நாற்றைப் பறித்து வயலுக்குக் கொண்டு வர கிராமத்துப் பெண்கள் வீட்டுக்கு ஒருவராக பெரும் குழுவாக வயலில் இறங்கி நடுவார்கள். ஒரு நாள் ஒருவரின் வயல் என்றால் இன்னொரு நாள் இன்னொரு வரின் வயல் என்று முறை வைத்து நடவு வேலை நடக்கும். காலை தொடங்கி மாலை வரை நடக்கும் வேலையில் சோர்வு தெரியாமல் இருக்க பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள். இப்படி வயல்காடுகளில் பாடியே நல்ல குரல் வளமும் தேர்ச்சியும் பெற்று கிராமத்தில் நட்சத்திரத் தகுதியடைந்த பெண்களும் இருந்தார்கள். இவர்களின் பாட்டுக் குரல் நெடுந்தொலைவு வரையிலும் கேட்கும்.  இப்படி நடவின்போது அந்த வழியிலோ அல்லது வயல் வரப்பிலோ யாரேனும் ஊர்ப் பெரியவர்கள் வந்துவிட்டால் சில குறும்புக்காரப் பெண்கள் நாற்று முடியை அவர்களின் வழியை அடைத்து வைத்து விடுவார்கள்.வந்தவர் நாற்று முடியைத் தாண்டமாட்டார்.நடவு செய்யும் பெண்கள் அந்த மனிதரைப் பற்றிப் புகழ்ந்து பாடி பெருங் குரலில் குலவையிடுவார்கள்.அதன்பின் அந்த மனிதர் குலவை யிட்டவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டுத்தான் அங்கிருந்து செல்வார். .இந்தச் செயல் பெரிய மனிதர்களைக் கவுரவிக்கும் விதமாகவே கருதப்பட்டது.இதெல்லாம் இப்போது இல்லை. எல்லாம் மாறிப் போய்விட்டது.அந்தக் குலவைச்சத்தத்தை இப்போது நினைவு படுத்திப் பார்க்கும்போது எதையோ இழந்து விட்ட உணர்வு என்ன ஓட்டத்தை சற்றே இடைமறிக்கிறது. 



                                                         நினைவு -2

                                                            ஈசல் பொரியல்

மழைக் காலத்தின் துவக்கத்தில் முதல் மழை பெய்து நின்று வெய்யில் அடித்ததும் பூமிக்குள்ளிருந்து சிறு பிளவு உண்டாக்கி அதன் வழியாக ஏராளமாக ஈசல் பூச்சிகள் வெளிவரும்.அதைப் பார்த்ததும் பெண்களும் சிறுவர்களும் அந்தப் பிளவுகளின் மீது துணியால் ஒரு வலையை உருவாக்கி ஈசலைப் பிடிப்பார்கள்.சில சமயங்களில் சிறுவர்கள் அந்தப் பிளவில் வாய் வைத்து ஊ ஊ என்று குரல் கொடுப்பார்கள்.அப்படிச் செய்தால் ஈசல்கள் விரைவாக வெளியே வரும் என்பது அவர்களின் நம்பிக்கை.காக்கைகளும் மைனாக் குருவிகளும் தப்பிப்  பறந்து வரும் ஈசல்களை பிடிப்பதற்காக சிறுவர்களின் தலைக்கு மேல் வட்டமடிக்கும்.பாத்திரம்  நிறையப் பிடித்து வரும் ஈசல்களின் சிறகுகளை நீக்கிவிட்டு அரிசியோடு சேர்த்துப் பொறித்து அம்மாக்கள் பிள்ளைகளுக்கு சாப்பிடக் கொடுப்பார்கள்.ஈசலில் புரதச்சத்து அதிகம் என்பதை அவர்களுக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள்  ?


                                                 நினைவு-3

                                                             கூட்டாஞ்சோறு.

கோடை காலப் பள்ளிக்கூட விடுமுறையில் பொழுதைப் போக்க  கிராமத்தில்  சிறுவர்கள் பல விதமான விளையாட்டுக்களை விளையாடுவார்கள்.அதில் ஒன்றுதான் கூட்டாஞ்சோறு.ஆண்களும் பெண்களுமாக ஒன்று சேர்ந்து அவரவர் வீட்டிலிருந்து அரிசியும் காய்கறிகளும் பொருட்க்களுமாகச் சேர்த்து ஊருக்கு வெளியே ஒன்று கூடி, ஆண்கள் காட்டில் விறகு சேகரித்து வந்து காய்கறி வெட்டிக்கொடுக்க பெண்கள் அடுப்பு அமைத்து சமையல் செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டு மாலையில் வீடு திரும்புவார்கள்.இந்த விளையாட்டுக்கு பெரியவர்களும் முழு ஆதரவு கொடுப்பார்கள்.அவர்களும் வந்து கூட்டாஞ்சோறு சாப்பிட்டுப்போவதும் உண்டு.விளையாட்டாக மட்டுமல்லாது கிராமத்து குடும்பங்களிடையே நல்லுறவையும் சிறுவர்களிடையே ஒற்றுமையையும் வளர்த்து வந்த இந்த உன்னதமான நிகழ்வு இப்போது இல்லை.ஏக்கமாகத்தான் இருக்கிறது.

                                         நினைவு-4

                                          மண் குடத்துக்  குடிநீர் 


சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் கிராமங்களில் மண்குடத்தில் குடிநீர்  வைத்து அருந்துவது வழக்கமாக இருந்தது. வீடுகளுக்கு முன்புறத்தில் நிழலான ஒரு இடத்தில் இந்தக்குடம் இருந்ததால் வழிப்போக்கர்களும் தாகத்துக்கு நீர் அருந்திச் சென்றனர்.நுண்துளைகள் நிறைந்த மண்குடம் நீரை சுத்தமாகவும் எப்போதும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். இந்தக் குளிர்சாதன முறை மிகவும் சுகாதாரமானதும் சிக்கனமானதும் உடலுக்கு நலம் பயப்பதும் ஆகும்.மண் குடங்களின் இடத்தை இப்போது பெட் பாட்டில்கள் பிடித்துக்கொண்டுவிட்டன.  வருத்தமாக இருக்கிறது  

         
                                                                                   நினைவு-5
                                            
                                                                                          சிட்டுக்குருவிகள் 

கிராமத்து வீடுகளில் மாட்டிவைத்திருக்கும் போட்டோ பிரேம்களின் பின்னால் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி முட்டை யிட்டு  குஞ்சு பொரிக்கும். அவைகள் போடுகின்ற சத்தம் வீட்டுக்கு ஒரு நிறைவைத் தரும்.வீ ட்டுக் குள் அவை வருவதும் வெளியே பறப்பதுமாக அவற்றின் புழக்கம்  குடும்பத்தில் ஒருவரைப் போல அன்னியோனியமாக இருக்கும்.சில வீட்டுக்காரர்கள் அவை களுக்காக சின்ன மண்பானையில் துளை போட்டு கூரையில் கட்டி வைப்பார்கள்.அதில் சிட்டுக்குருவி கூடுகட்டிக் கொள்ளும்.அந்தக் குருவிகள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டன ? யாருக்காவது தெரியுமா ?

                                                                  நினைவு -6
                               
                                                              பச்சைக் கிளிகள் 

பனைமரக் கூட்டங்களுக்கிடையே 'கீச்..கீச்' என்று கத்தியவாறு பச்சைக் கிளிகள் பறந்து திரியும். சுட்டிப்பயல்கள் பனைமரத்திலேறி பொந்துக்குள்ளி ருந்து கிளிக் குஞ்சு களை எடுத்து வந்து வளர்ப்பார்கள். அனேகமாக வீட்டுக் கொரு கிளி வளரும்.பனைமரங்கள் இப்போது வெறிச்சோடி நிற்கின்றன. கிளிகள் எங்கோ வேற்றிடம் தேடிப் போய்விட்டன.ஏன் இப்படி?



                                                                          நினைவு-7

                                                                      வண்ணத்துப்பூச்சி 




வசந்தகாலம் துவங்கியதும் ஊரெல்லாம் பூத்துக்கிடக்க எங்கிருந்தோ அணியணியாய் வந்து செடிக்குச்செடி பறந்து தெருவெல்லாம் திரிந்து தோளிலும் அமருமே இந்த அழகுப் பூச்சி ...இப்போது காணாமல் போய்விட்டதே ஏன் ? மறுபடியும் எப்போதாவது அது திரும்பி வருமா .....?
   


                                                                             நினைவு-8


                                                                              கூண்டு வண்டி 



கிராமங்களில் வீட்டுக்கு வீடு வாட்டசாட்டமான ஒரு ஜோடிக் காளைமாடுகள் கட்டாயம் இருக்கும்.உழவுக்கும் சுமை வண்டி இழுப்பதற்கும் மட்டுமல்லாது கூண்டு வண்டி என்று சொல்லப்பட்ட பயண வண்டியையும் இந்தக் காளைகளே இழுத்துச் சென்றன.இந்தக் கூண்டு வண்டியில் மெத்தை போடப்பட்டு மேலே அழகான வடிவங்கள் வரையப்பட்ட வண்ணத்துணி போர்த்தப்பட்டிருக்கும்.

தினமும் காலையிலும் இரவிலும் இந்தக் காளைகளுக்கு ஒரு பெரிய கல்தொட்டி யில் தண்ணீர் நிரப்பி அடுக்கியிருக்கும் மூட்டைகளிலிருந்து தவிட்டைப் பிரித்துக்கொட்டி குடிக்க வைப்பார்கள். பருத்திக்கொட்டை ,பிண்ணாக்கு வைத்து சாப்பிடச் செய்வார்கள்.காளைகளின் உடல் அளவும் தோற்றமும் உரிமையாளர்களின் கவுரவத்தையும் செல்வச் செழிப்பையும் பறைசாற்றுவதாக இருந்தன.இப்போது அந்தக் கல்தொட்டிகள் மட்டும் சற்றுத் தேய்ந்துபோன நிலையில் அங்கேயே கிடக்கின்றன.ஆனால் மாடுகளைக் காணவில்லை.காளைகள் நின்ற இடத்தில் டிராக்டர்களும் கூண்டு வண்டிகளின் இடத்தில் மோட்டார் சைக்கிள்களும் நிற்கின்றன.

                                            தொடரும் .....





'பாஸ்போர்ட் இல்லாமல் ஒரு பாரீன் பயணம்' படிக்க சொடுக்குக  
http://thenpothikai.blogspot.in/2012_07_01_archive.html












' மணிமாறன் மாமா சொன்ன கதை-3 'படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/09/3.html