ஞாயிறு, 24 நவம்பர், 2013

எங்கே இருக்கிறாய் நண்பா..?










நம் எல்லோருக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்.அவர்களில் பள்ளித் தோழர்கள் , பால்ய நண்பர்கள் மற்றும் முகநூல் நண்பர்களைத் தவிர்த்து விடுவோம். ஏனெனில் இவர்கள் எல்லாம் காலத்தின் கட்டாயமாக நம்மோடு இணைந்த வர்கள். நமது பயணத்தின்  வழியில் இடையில் சேர்ந்து கொண்ட   மற்ற நண்பர்களைப் பற்றித்தான் நாம் இங்கே பேசப் போகிறோம்.

இந்த  நமது நண்பர்கள் எங்கிருந்து வந்தார்கள் ..? எப்படி அவர்கள் நண்பர்களானார்கள்..?

கொஞ்சம் சிந்தித்தால் விநோதமாகத்தான் இருக்கிறது.

கல்லூரி விடுதியில் நண்பன் ஜெகதீசனுக்கும் எனக்கும் இடையே இருந்த தீவிர நட்பைப் பார்த்து மற்ற தோழர்கள் எங்களை ' Amigo friends' என்று அழைத்தார் கள். எங்களிடையேயும்  சண்டை உண்டாகும்  என்பதை நம்ப முடியாமல் சில சமயங்களில் எங்களுக்கிடையே நடக்கின்ற உண்மைச் சண்டைகளில் கூடத்  தலையிட மறுத்தார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னாள் ஒரு இரவில் வேலை முடிந்து வீட்டுக்குக் கிளம்பியபோது வாகனம் எதுவும் இல்லாததால் யோகேஷ் என்கிற உடன் பணி புரிந்த ஒருவரை என்னுடைய இரு சக்கர வாகனத்தில் ஏற்றி விட்டார்கள் நிர்வாகிகள்.அரை மணி நேரப் பயண நேரம் ஒரு நட்பு மலரப் போதுமானதாக இருந்தது.இன்றும் அவர் எமது நெருக்கமான நண்பர்.

எங்கள் பணியிடத்திற்கு அவ்வப்போது வந்து போகிற அப்துல்லா எம்மோடு பணி செய்கிற சரவணனின் பள்ளித் தோழர்.எப்போதும் ஸ்மார்ட்டாக உடையணிகிற அப்துல்லாவுக்கு அவரைப் போலவே பாந்தமாக ஆடை உடுத்துகின்ற என்னைப் பிடித்துப்போனது.பத்தாண்டுகளுக்கும் மேலாக நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.

முதல் பயணமாகப் பாண்டிச்சேரி சென்றிருந்த சமயத்தில்  போக வேண்டிய இடத்துக்கு வழி தெரியாமல் நின்றிருந்தபோது கூடவே வந்து வீட்டில் விட்டுச் சென்ற ஒரு இளைஞன் நண்பனாகி பின்னால் அவன் சென்னைக்கு வந்தபோது எம் வீட்டுக்கும் வந்து சென்றான்.

ஒரு சுற்றுலாக் குழுவோடு சென்னைக்கு வந்திருந்த மலேசிய நண்பர் ராஜாவின் அழைப்பின் பேரில் அவரைப் பார்க்கச் சென்றபோது அந்தக் குழுவினரின் வாகனத்தில் எனக்கு அருகே அமர்ந்து இருந்த ராஜேந்திரன் சென்னையில் அவருக்குத் தெரிந்த ஒருவரைச்  சந்திக்க உதவி கேட்க அன்று மாலை அவரை அழைத்துச் செனறதன் மூலமாக அவர் நல்ல நண்பராகி அந்த நட்பு இன்றும் தொடர்கிறது.

மற்றுமொரு மலேசியத் தமிழ்ப் பெண்ணான லலிதா வாரம் ஒரு முறை நீண்ட கடிதம் எழுதி விசேஷ நாட்களில் அன்போடு பரிசுகளையும் அனுப்பி வைக்கும் நல்ல தோழியாக இருந்தார்.

இலங்கைக்குச் சென்றிருந்தபோது நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகேயிருந்த மது பான விடுதியின் மேலாளர் ஜெயக்கொடி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என்னைப் பார்த்து ' இன்னிக்கு பைன்டொன்னு இருக்குதானே ' என்று அழைப்பார்.[ பைன்ட் என்பது குவார்ட்டர் மாதிரி ஒரு அளவு ].

நாங்கள் அங்கேயிருந்த பத்து நாட்களில் நட்பு நெருக்கமாகி நாங்கள் ஊருக்குத் திரும்பியபோது நான் புதிய கேமரா வாங்கியதால் என்னிடமிருந்ததை அவரிடம் கொடுத்து விட்டு வருமளவுக்கு விரிந்தது.

 மதுரையிலிருந்து   ராமேஸ்வரத்துக்கு ரயிலில் சென்றபோது கூடப் பயணித்த சுவீடனைச் சேர்ந்த இளைஞ்ன் ' பீட்டர் பேரஷடிக் ' கோடு   பேச்சு ஏற்பட்டது. பட்ஜெட் சுற்றுலாப் பயணியான அவன் ராமேஸ்வரத்தில் தங்கும் அறைக் கட்டணத்தை இருவருமாகப் பங்கு போட்டுக்கொள்ள அழைத்தான்.அன்றைய  இரவுகளில் சுவீடனில் பனிக்காலத்தில் அவன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் பனியோடு பனியாகச் சுருண்டு கிடக்கின்ற கரடிகளின் மீது உட்கார்ந்த கதைகளைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவான்.  மூன்று நாட்களுக்குப் பிறகு அவன் இலங்கைக்குப் பயணத்தைத் தொடர்ந்தபோது கண்கள் கசிய விடை பெற்ற காட்சி  இன்னும் கண்களில் நிற்கிறது.

சிறிது காலம் கோவை நகரில் நண்பன்  மனோகரோடு தங்கியிருந்த போது  மனோகரின் நண்பன் கில்பர்ட் வார முடிவில் சம்பளம் வாங்கியதும் நேராக வந்து என்னை அழைத்துப்போய் சிலோன் ஹோட்டலில் பரோட்டா வாங்கித் தந்து சென்ட்ரல் தியேட்டருக்கு படம் பார்க்கக் கூட்டிப் போவான்.

மனோகரின் சகோதரி சாந்தியோ கொஞ்சமும் விகல்பமில்லாமல் என்னைத் தொடை மீது படுக்க வைத்து நகம் வெட்டி விடுமளவுக்கு தூய தோழியாயிருந் தாள்.

அரசுப் பணி நிமித்தமாக பொன்னமராவதி அருகே இருக்கின்ற புதூரில் சிறிது காலம் குடியிருந்தபோது அங்கே ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த , என்னை விடவும் பல வருடங்கள் இளையவனான குமார் நண்பனாகி நாளாவட்டத்தில் என்னை பங்காளி என்று அழைக்கும் அளவுக்கு உரிமை பெற்றுக் குடும்ப நண்பனான்.

இந்த நண்பர்களில் சிலர் இன்னும் எம்மோடு இருக்கிறார்கள்.மற்றவர்கள் எங்கே , எப்படி இருக்கிறார்கள்..? .என்ன செய்கிறார்கள்..? தெரிந்து கொள்ள விழைகிறது மனம்

இன்னும் நீள்கிறது நண்பர்கள் பட்டியல். வாசிக்கின்ற உங்களுக்கு சலிப்பு வந்து விடக்கூடாது என்று எச்சரிக்கிறது மனம்.அதனால் இப்போது விடை பெறுவோம்.மறுபடியும் சந்திப்போம்.

 .









ஞாயிறு, 3 நவம்பர், 2013

திருவரங்கம் [ஸ்ரீரங்கம் ] திருக்கோவில்

     





âñ¶ èEEJ¡ ªêò™ð£†´ «õè‹ °¬ø‰î «î¬õòŸø 
«è£Š¹è¬÷ ÜNˆ¶ Mì â‡E ܬõè¬÷ˆ «î®ò«ð£¶ å¼ ²ŸÁô£ GÁõùˆF¡ °Á‹ð숶‚è£è à¼õ£‚èŠð†ì މ
«è£Š¹ A¬ìˆî¶.Þ¬îˆ «î¬õòŸø «è£Šð£è‚ è¼î º®»ñ£,,? Üîù£™ ♫ô£¼‹ ÜP‰¶ ªè£œ÷ «õ‡´‹ ⡪ø‡E Þƒ«è ðFM´A«ø£‹.

ï¡P.
          



       F¼ óƒèï£î võ£I F¼‚«è£M™. F¼õóƒè‹.








ðö¬ñ õ£Œ‰î F¼„Có£ŠðœO ïèK¡ ܼ«è Üö° IO¼‹ è£MK ñŸÁ‹ ªè£œOì‹ ÝAò Þó†¬ì ïFèÀ‚A¬ì«ò ܬñ‰F¼‚A¡ø b¾ «ð£¡ø ÞòŸ¬è õ÷I‚è GôŠð°FJ™ ð‡¬ìˆ îIöK¡ è†®ì‚ è¬ôJ¡ CøŠ¹‚ªè£¼ ꣡ø£è õ£ù÷£õ GI˜‰¶ G¡Á ðô è£î É󈶂° ÜŠð£L¼‰¶‹ 裇«ð£K¡ è‡è¬÷»‹ 輈¬î»‹ G¬øˆ¶ CL˜‚è ¬õ‚°‹ ªîŒiè ÜÂðõˆ¬îˆ î¼Aø¶ F¼õóƒè¡ðœO ªè£‡´œ÷ F¼õóƒè‹ «è£ML¡ ó£ü «è£¹ó‹.

Ì«ô£è ¬õ°‡ì‹ â¡ø CøŠ¹Š ªðò˜ ªðŸÁ 𣶠vgóƒè‹ â¡Á ܬö‚èŠð´A¡ø Þ‰î ¹‡Eò ÌIJ™ ܬñ‰F¼‚A¡ø vgóƒèï£î ²õ£I Ýôò‹ Mwµ ªð¼ñ£Â‚° ܘŠðE‚èŠð†ì 108 Fšò «îêƒèO™ ºî¡¬ñò£ù¶‹ IèŠ ðö¬ñ õ£Œ‰î¶‹ ²ò‹¹õ£Œ ܬñ‰î ↴ˆ îôƒèO™ å¡ø£ù¶‹ Ý°‹.156 ã‚è˜ ðóŠð÷M™ Hó‹ñ£‡ìñ£ùî£è, Þ‰Fò£M«ô«ò ªðKò «è£Mô£è¾‹ àôèˆF¡ I芪ðKò õN𣆴ˆ îôƒèO™ å¡ø£è¾‹ ܬñ‰¶œ÷ Þ‚«è£M™ ñQî àìL¡ ã¿ º‚Aò ܬñŠ¹è¬÷‚ °P‚°‹ õ¬èJ™ ã¿ Hóè£óƒè¬÷»‹ ñˆFJ™ Ý¡ñ£õ£è è¼õ¬ø¬ò»‹ ªè£‡´œ÷¶. Hóè£óƒèO¡ e¶ ܬñ‚èŠ
 ð†´œ÷ 21 ªï®¶ò˜‰î «è£¹óƒèœ ↴ˆ F‚°‹ îKêù‹  ð‚î˜èÀ‚° ðóõê à혬õˆ î¼A¡øù. Hóî£ù ó£ü«è£¹ó‹ 5720 ê¶ó Ü® ðóŠð÷M™ ðF«ù£¼ Ü´‚° è«÷£´ 237 Ü® àò󈶂° ⿉¶ M‡¬íˆ ªî£†´ GŸAø¶.

ÝJó‹ ݇´èÀ‚° «ñ™ ðö¬ñ õ£Œ‰î މè£M™ õ÷£è‹ 14 ñŸÁ‹ 17 Ý‹ ËŸø£‡´èÀ‚° Þ¬ìŠð†ì è£ôˆF™ î˜ñõ˜
 «ê£ö¡, AœOõ÷õ¡ ñŸÁ‹ ðô ñ¡ù˜è÷£™ ðô è†ìƒè÷£è G˜ñ£E‚èŠ ð†´ MK¾ð´ˆîŠ ð†ì¶.ÜöAò CŸð «õ¬ôŠ
ð£´è¬÷‚ ªè£‡ì ÝJó‹ ɇè«÷£´ ܬñ‰î ñ‡ìð‹ è™L«ô õ®ˆî èM¬îò£è è‡è¬÷»‹ 輈¬î»‹ èõ˜Aø¶.

vg óƒèï£î˜ «îõ ꘊðñ£ù ÝF«êû¡ e¶ Üù‰î êòù‹ 
ªè£‡ì «è£ôˆF™ îKêù‹ î¼õ¶ Þ‚«è£ML¡ ªð¼‹ 
CøŠð£°‹.óƒèï£îK¡ ê¡ùF«ò£´ vg óƒèCò£K¡ ê¡ùF»‹ ê‚èóˆî£›õ£˜, à¬ìòõ˜, è¼ì£›õ£˜, ýò‚gõ˜ ñŸÁ‹ î¡õ‰FK ê¡ùFèÀ‹ ñŸÁ‹ 53 àð ê¡ùFèÀ‹ Þƒ«è Üðò‹ «î®õ¼A¡ø Ü¡ð˜èÀ‚° ܼœ ð£L‚A¡øù.

ÜÂFùº‹ 裬ô 6.00 ñE ªî£ìƒA Þó¾ 9.00 ñE õ¬óJ™ Þƒ«è ̬üèÀ‹ Ýó£î¬ùèÀ‹ F¼ñ…êùº‹ ªî£ì˜‰¶ ï¬ìªðÁA¡øù. ꘂè¬óŠ ªð£ƒè½‹ îf˜ê£îº‹ ð…ê£I˜îº‹ b˜ˆîº‹  Hóê£îƒè÷£è õöƒèŠð´A¡øù.îIöè ºî™õ˜
 ñ£‡¹I° ªü.ªüòôLî£ Üõ˜è÷£™ ªêŠì‹ð˜ 3 Ý‹  Ü¡Á GˆFò Ü¡ùî£ùˆ F†ì‹ ¶õƒèŠð†´ ð‚î˜èœ ñŸÁ‹ ã¬ö, âO«ò£K¡ ðCŠHE «ð£‚°‹ ¹‡Eò «ê¬õ»‹ ªêŒòŠð†´ õ¼Aø¶.

݇´ º¿õ¶‹ Mö£ M«êûƒèœ ªè£‡ì£ìŠð†´ õ¼A¡ø Þ‚«è£ML™ ñ£˜èN-¬î ñ£îƒèO™ ðè™ ðˆ¶ ï£†èÀ‹ Þó¾ ðˆ¶ ï£†èÀñ£è‚ ªè£‡ì£ìŠ ð´A¡ø ¬õ°‡ì ãè£îCˆ F¼Mö£ Iè„ CøŠ¹¬ìò‹.

îI›ï£´ Üó² Þ‰¶ ÜøG¬ôòˆ¶¬øJ¡ W› Þ‚«è£M™  G˜õA‚èŠð†´ õ¼Aø¶. «î£Á‹ õ¼¬è î¼A¡ø ÝJó‚
èí‚è£ù ð‚î˜èO¡ Ü¡ø£ì ñŸÁ‹ Üõêóˆ «î¬õè¬÷ Gõ˜ˆF ªêŒ»‹ õ¬èJ™ «è£M™ õ÷£èˆ¶‚°œ 24 ñE «ïóº‹ ªêò™
ð´A¡ø ñ¼ˆ¶õ ºè£º‹ CøŠ¹ bò¬íŠ¹ ñŸÁ‹ e†¹ ¬ñòº‹ è£õ™ G¬ôòº‹ ܬñ‚èŠ ð†´œ÷ù. èNõ¬øèœ ²è£î£óñ£ù º¬øJ™ ðó£ñK‚èŠð†´ õ¼A¡øù.

F¼„C ñ£ïèKL¼‰¶ 7 A.e†ì˜ ªî£¬ôM™ ܬñ‰¶œ÷ vgóƒè‹ ï輂° ñ£ïèóŠ «ð¼‰¶ õêFèœ ªêŒòŠð†´œ÷ù.óJ™ G¬ôòº‹ àœ÷¶.

õ£¼ƒèœ. F¼õóƒè¬ùˆ îKCˆ¶ ÜõQ¡ F¼õ¼¬÷Š ªðÁƒèœ.







வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மலேசியத் தமிழ் மக்கள்






                 கன்யாகுமரி விவேகானந்தர் நினைவிடத்தில் நம்மவர்கள் 



மலேசியா நாட்டுக்கு நான் பல முறை சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் மாதக்கணக்கில் அங்கே தங்கியும் இருக்கிறேன்.

தமிழ் நாட்டிலிருந்து மலேசியா சென்று வருகின்ற பெரும்பாலான வர்களைப் போல கோலாலம்பூரோடு திரும்பி விடாமல் பினாங்கு,, அலொச்டார் , ஈப்போ , க்ரோ என்று மலேசியாவின் பல பகுதிகளுக்கும் பயணித்திருக்கிறேன் .

பினாங்கு வாட்டர் பாலைச் சேர்ந்த  ராஜாவோடு தாய்லாந்தின் 'ஹட்ஜாய்' க்கும் பட்டர்வொர்த் விஜய்  மற்றும் சுப்பிரமணியம் குடும்பத்தினரோடு  ஜெந்திங் ஹைலேண்ட்ஸ் பக்கத்தில் காட்டுக்குள்  அமைந்திருக்கின்ற ஒருமுனீஸ்வரர் கோவிலுக்கும் கூடப் போயிருக்கிறேன்.

கோலாலம்பூரிலிருந்து ' ஏர்கோன் ' பஸ் ஏறி விடிகாலை 2 மணிக்கு 'குவாந்தான்' நகரில் இறங்கி விட்டு திக்குத் திசை தெரியாமல் திண்டாடியிருக்கிறேன்.

மலேசியாவின் வடக்கு எல்லைச் சிற்றூரான 'க்ரோ' வழியாக தன்னந் தனியாக தாய்லாந்துக்குள் சென்று வந்திருக்கிறேன்.

அது மட்டுமல்லாமல் பினாங்கு நண்பர் 'அயத்தாம் '-[Air itham]  ராஜேந்திரனோடு மலேசியத் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்தபோது அவர்களோடு சுற்றுலா முழுவதும் நானும் உடனிருந்திருக்கிறேன்.

இந்தச் சுயப் பிரதாபங்கள் எல்லாம் எதற்கு என்பதை இதோ சொல்லி விடுகிறேன்.இப்படி மலேசியாவின் உள் பகுதி வரையிலும் பல முறை  பயணம் செய்திருப்பதால் எனக்கு மலேசிய நாட்டைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும்  ஓரளவு தெரியும் என்பதையும் அதனால் அவர்களைப் பற்றி இங்கே எழுத எனக்கு அருகதை உள்ளது என்பதையும் முதலிலேயே தெரியப்படுத்திக் கொள்வதற்காகவே இந்தச் சுற்று வளைப்புகள்.

மலேசியத் தமிழ் மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்.அவர்களுடைய மிக முக்கியமான சிறப்பம்சம் ஒன்றை முதலில் சொல்லிவிட வேண்டும்.அது அவர்கள் பேசுகின்ற தமிழ்.மிகச் சுத்தமான  தமிழில் அவர்கள் பேசுகிறார்கள். அவர்களுடைய தமிழ்ப் பேச்சு  நம்மை வியக்க வைக்கிறது.

காலை நேரத்தில் நாம்  பிரேக் பாஸ்ட்டுக்குத் தயாராகும் போது அவர்கள் ' பசியாறி விடலாமா ? ' என்று கேட்கிறார்கள்.' வீட்டுக்குள் நுழைந்து விட்டோம் 'என்று சொல்லாமல் ' வீட்டுக்குள் புகுந்து விட்டோம் ' -பூந்துட்டோம் -என்று சொல்கிறார்கள்.

'பேக் , சூட்கேஸ் ' என்கிற பேச்சே இல்லை .' பை,' 'பெட்டி ' தான்.  செருப்பு-சப்பாத்து . பேன்ட் -சிலுவார் . டாய்லட் -பீலி.

கொடைக்கானலில் ஸ்வெட்டர் அணிந்தபோது மலேசியத் தமிழ்ப் பெண்மணி ஒருவர் சொன்னார்.' நீட்டக்கைச் சட்டை போட்டுட்டீங்க..? '

மிகப் படித்த புதிய தலைமுறை இளைஞ்ர்களும் கூட தமிழில் பேசும்போது ஆங்கிலக் கலப்பு இல்லாமலேயே பேசுகிறார்கள்.சுற்றி வளைத்து நிற்கின்ற மலாய் மற்றும் சீன மொழிகளின் ஊடுருவ லிலிருந்து தம் தாய்மொழியைக் காப்பாற்றுவதற்காக யாரோ ஒரு மொழிப் பற்றாளர் தோற்றுவித்து வைத்த  இந்தப் பழக்கத்தை நம் மக்கள் இன்று வரை விடாது  கைக்கொண்டு வருவது உண்மையில் மிகச் சிறப்பு.

ஆனால் இந்தப் பாராட்டுத் தோரணங்களுக்கு இடையிலே கிழிந்து தொங்குகின்ற ஒரு வண்ணப் பதாகையை நம்மால் மறைக்க இயலாது. பெரும்பாலான மலேசியத் தமிழ் மக்களுக்கு தமிழை எழுதப் படிக்கத் தெரியாது.அரசாங்கத்தின் கல்விக் கொள்கைகளுக்காக நம்மவர்களை நாம் குறை சொல்ல முடியாது.தமிழ் படிக்க அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வளவுதான்.

முகநூலில் [ Facebook ] இருக்கின்ற எமது மலேசியத் தமிழ் நண்பர்கள் ' மலாய் ' மொழியில் இடுகின்ற பதிவுகளும் பின்னூட்டங்களும் எமக்குப் புரிவதில்லை.

பேச்சு மொழியைக் காப்பாற்றி விட்டார்கள்.ஆனால் ஆடைக் கலாசாரத்தைக் கைதவற  விட்டு விட்டார்கள்.பெண்களின் குட்டைப் பாவாடைகளும் கையில்லாத மேல்சட்டைகளும் கருத்த முகத்தில் சிவப்பு உதட்டுச் சாயமும் ஆண்களின் பொம்மைச் சட்டைகளும் தாயகத்  தமிழரிடமிருந்து அவர்களை வெகு தூரத்துக்குப் பிரித்து எடுத்துச் செல்கின்றன.

தற்போது பெண்கள் சுரிதார் அணிய ஆரம்பித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது. எழுபது வயது மூதாட்டிகள் கூட முடிச் சாயத்தின் ஆதரவோடு இளமையாக இருக்கிறார்கள்.

தைப்பூசம் போன்று எப்போதாவது பண்டிகைக் காலங்களில் அவர்கள் வேட்டி,சேலை அணிகிறார்கள்.ஆனால் அவைகளின் வண்ணமும் வடிவமைப்பும் முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.

 நாம் இங்கே தாயகத்தில் பெருமையாகச் சொல்லிக் கொள்கின்ற ' ஹவுஸ் வைப் ' என்கிற ஒரு பதவி மலேசியாவில் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்கு  அவசியமும் இல்லை. ஏனென்றால் அங்கே  யாருமே வீட்டில் இருப்பதில்லை.எல்லோரும் எதாவது ஒரு வேலைக்குப் போகிறார்கள்.

நீங்கள் மலேசியாவுக்குப் போனால் எவ்வளவு நெருங்கிய உறவினராக இருந்தாலும்  கூட அவர்கள்  உங்களை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குப் போய்விடுவார்கள்.குளிர்ப் பெட்டியில் இருப்பதை எடுத்துச் சாப்பிட்டுக் கொண்டு தொலைக் காட்சி பார்த்துக்கொண்டு பொழுதைக்  கழிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அவர்களை ரொம்பவும் பயப்படுத்துகின்ற ஒரு பிராணி நம் ஊர் சமையலறைகளில் செல்லப்பிராணிகளைப் போலத் திரிகின்ற கரப்பான் பூச்சிகள்.கரப்பான் பூச்சிகளைப் பார்த்தால் அவர்கள் சிங்கத்தைப் பார்த்தவர்கள் போல அலறுகிறார்கள்.ஈயும் கூட அவர்களுக்கு எரிச்சல் மூட்டுகிறது.

அதிகாலையிலேயே ' பசியாறி' விடுகிறார்கள்.அது எல்லோருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால் வந்த பழக்கமாக இருக்கலாம்.

தண்ணீரோ பியரோ மிகக் குளிர்ந்த நிலையில் இருந்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கிறது.பெரிய கண்ணாடிக் குவளைகளில் கிட்டத்தட்ட கால் கிலோ ஐஸ் போட்டு 'சார்ஸி ' [ பெப்சி போன்ற ஒரு கோலா பானம் ] அருந்துகிறார்கள். இதன் விளைவாக விரைவாகவே அவர்களுக்கு பற்கள் விழுந்து போவதைக் கவனித்திருக்கிறேன்.

காலை நேரத்தில் அரை லிட்டர் அளவுக்கு 'தே ' [ தேநீர் ] குடிக்கிறார்கள்.[ சீனர்களுக்கு 'டி ' உச்சரிப்பு வராது.அதனால் அவர்கள் டீயை 'தே ' என்று சொல்ல நம்மவர்களும் அப்படியே சொல்கிறார்கள்.] இங்கே வரும் போது நம்ம ஊர் உணவகங் களில் அவர்கள் ஒரே சமயத்தில் இரண்டு தேநீர்கள் ஆர்டர் செய்வதைக் கண்டு பணியாளர்கள் திகைத்து நின்றதை பலமுறை  ரசித்திருக்கிறேன்.

மலேசியத் தமிழ் மக்களுக்கு ' டிப்ஸ் ' கொடுக்கும் பழக்கம் இல்லை. அதனால் இங்கே அவர்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகப் பணியாளர்களிடம் முதுகுக்குப் பின்னால் திட்டு வாங்குவது அவர்களுக்குத் தெரியாது.இந்தத் தர்ம சங்கடத்தைத் தவிர்க்க முதலிலேயே பணியாளர்களிடம் விஷயத்தைச் சொல்லி நானே அவர்களைக் கவனிக்க வேண்டியதாயிருந்தது.

சொல்லச் சங்கடமாகத்தான் இருக்கிறது.ஆனாலும் சொல்லிவிட உந்துதல் உண்டாகின்றது.நம்மவர்களுக்கு ரசனை கொஞ்சம் குறைவுதான். உலகமே ரசிக்கின்ற கேரள ஆலப்புழா [Allepey Backwaters ] நீரிணையில் மூன்று மணி நேர 'ஷிகாரி ' படகுப் பயணத்தின் போது  அவர்கள் தூங்கிக் கழித்ததுதான் அதிக நேரமாயிருந்தது. இங்கே , அங்கே , எங்கேயும் நம்மவர்களுக்கு சினிமாதான் பிரதானம்.

மலேசியப் பெரும்பான்மைத்  தமிழ் இளைஞர்களிடம் வாழ்க்கை பற்றிய லட்சிய உணர்வு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.மிக அலட்சியமாக அவர்கள் இருக்கிறார்கள்.அடுத்த தலைமுறையிலாவது கல்வித் திறன் பெற்ற ,ஆக்கபூர்வ சிந்தனை கொண்ட ஒரு இளைஞர் சமுதாயம்  உருவாகட்டும்.

குறை சொல்வது இங்கே நோக்கமில்லை.குறைப்பட்டியல் அடுக்குவது போலத் தோற்றம் எதுவும் ஏற்பட்டிருந்தால் அதற்கு எமது ஆதங்கத்தின் வெளிப்பாடையே காரணமாக  எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

எல்லாக் குறைகளையும் தாண்டி மிக நிறைவாக இருக்கின்ற ஒரு விஷயத்தை இங்கே முத்தாய்ப்பாகச் சொல்லி முடித்துக் கொள்வோம். மலேசியத் தமிழ் மக்களிடையே சாதி இன பேதமில்லை.ஆமாம்,அது இல்லவேயில்லை.

அது மட்டுமல்லாமல் தாயகத்தை விடவும் அங்கே தேசிய ஒருமைப்பாடு  அதிகச் சிறப்பாக நிலவுகிறது.மலையாளிகள் , தெலுங்கர்கள் , சீக்கியர்கள் என எல்லோரும் இந்தியர்கள் என்ற ஒரு இனத்தின் உருவமாக வாழ்கிறார்கள்.

இன்னும் சிறப்பாக , நாம் வியக்கின்ற விதமாக குர்பிரீத் கவுரும் ராஜ்பால் சிங்கும் கோபால் ராவும் நல்ல தமிழ் பேசி பொங்கலும் தைப்பூசமும் கொண்டாடி தமிழர்களாகவே அங்கே  அடையாளம் காணப்படுகிறார்கள்.

சிறுபான்மையினராக வாழ்கின்ற ஒரு சமுதாயத்தில் நாம் நமது வாழ்க்கை முறையை வெகு கவனமாகவும் மிகுந்த உத்வேகத்துடனும் அமைத்துக் கொள்வது அவசியமாகிறது.அறிவுத் திறனையும் உழைப்பையுமே ஆயுதமாக எடுத்துக் கொண்டு நமக்கான சமுதாயத்தை நாம் கட்டி எழுப்பிக் கொள்ள வேண்டும்,  அப்படியில்லையெனில் நாம் சற்று அயர்ந்த நேரத்தில் அது தேன்கூடு போல கலைக்கப்பட்டு விடுமென்பதையும் நாம் நம் அனுபவத்தில் கண்டுவிட்டோம்.

இந்தக் கவலை மற்றும் அக்கறையின் வெளிப்பாடே இந்தக் கட்டுரை. எத்தனை மலேசியத் தமிழ் மக்கள் இந்த இடுகையை வாசிப்பார்கள்  என்பது எமக்குத் தெரியாது. யாரேனும் வாசித்தால் அவர்கள் மூலமாக நம்மவர்களுக்கு  எமது  வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.









வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சென்னை அரசு அருங்காட்சியகம் -படங்கள்



சென்னை அரசு அருங்காட்சியகத்தைப் பற்றிய ஒரு ஆவணப் பட உருவாக்கத்தின்போது அருங்காட்சியகத்துக்குள் விரும்பியவாறு புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள சிறப்பு அனுமதி கிடைத்தது.

எல்லோருக்கும் கிடைக்காத இந்த வாயப்பின்படி யாம் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை எல்லோரும் காணும்படி இங்கே வெளியிட விரும்புகிறேன்.

























 













வியாழன், 12 செப்டம்பர், 2013

ஓவியப் பயிற்சி ...யாருக்கு,,?






ஓவியம்  வரையும் பழக்கம் கைவிட்டுப் போய் வெகு காலமாகி விட்டது.இரண்டு நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டுச்சிறுமிகள் இருவர் வந்து பள்ளியில் புறத் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக படம் வரைந்து தரச் சொல்லி அன்புத் தொல்லை தந்தனர்.சரியென்று மற்ற வேலைகளைக் கொஞ்சம் புறந்தள்ளி வரைந்து கொடுத்தேன்.

சிறுமிகளுக்கு இது பயிற்சியாக இருந்ததோ என்னவோ எனக்கு மிக நல்ல பயிற்சியாக இருந்தது.

அந்தப் படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு....படம் எப்படி இருக்கிறது ?













ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

முயல் வேட்டை -ஒரு பழங்கதை








                                                              கையில் முயல்


[ இப்படங்கள்  அண்மையில் நடந்த ஒரு சிறு வேட்டையின்போது எடுக்கப்பட்டது.]


பண்டைத் தமிழரின் வாழ்க்கைமுறை பரபரப்பானதாக பல்சுவைகளும் நிரம்பியதாக இருந்தது,ஆதித் தமிழரின் வரலாற்றினை ஆழ்ந்து கவனிக்கும் போது அவர்கள் கிடைத்தற்கரிய பேறான இந்த மனிதப் பிறவியின் மகத்துவத்தையும் உலக வாழ்வின் மாண்பையும் மிக நன்றாக உணர்ந்திருந்ததை புரிந்துகொள்ள முடிகிறது.

அதனால் அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்கி அனுபவித்து வாழ்ந்தார்கள்.இயலும் இசையும் நாடகமும் அவர்களின் வாழ்வோடு இணைந்து பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந்து கிடந்தன,

நாற்று நடவு , வயலுக்கு நீர் இறைத்தல் , குழந்தைக்குத் தாலாட்டு , மரித்தோருக்கு ஒப்பாரி என்று வாழ்க்கைப் போராட்டத்தையே அவர்கள் இசை மயமாக்கி இனிதே வாழ்ந்தார்கள்.

கலைகளுக்கு இணையாக அவர்கள் வாழ்வில் விளையாட்டும் முக்கியத் துவம் பெற்றிருந்தது.உடல்நலம் பேணும் வகையிலும் அறிவைத் தூண்டும் வகையிலும் சிந்தனையைச் சீர்படுத்தும்  வகையிலும் அவர்கள் உருவாக்கி வைத்திருந்த விளையாட்டுகள் ஏராளம். அவைகளெல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன என்பதை இங்கே மிக்க வருத்தத்தோடு சொல்ல வேண்டியதாயிருக்கிறது.

எனினும் எமது வாழ்க்கைக் காலத்தில் அவைகளில் எஞ்சியிருந்த சிலவற்றைக் காணவும் கலந்து கொள்ளவும்  நேர்ந்த வாய்ப்பினை எம் காலம் வரைக்கும் எம்மால் பெருமிதத்தோடு நினைவு கூற இயலும்.

இந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன் இந்த விளையாட்டுகளில் ஒன்றான ' வேட்டை ' யில் யான்  பெற்ற நேரடி அனுபவத்தைக் கொண்டு  அதைப்பற்றி இங்கே பதிவிட விழைகிறேன்.

முன்பே குறிக்கப்பட்டிருந்த ஒரு  நாளில் கிராமத்து ஆண்கள் குழுவாகத் திரண்டு தங்களின் நாய்களையும் அழைத்துக் கொண்டு காட்டு விலங்குகளை வேட்டையாடப் போவதைத்தான் 'வேட்டைக்குப் போவது ' என்று சொல்வார்கள்.விலங்குகள் என்று இங்கே சொல்லப்படுவது தற்காலத்தில் 'முயல்'களேயன்றி வேறொன்றுமில்லை.

அப்போது கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம். விடுமுறையில் வீட்டிலிருந்த ஒரு சமயத்தில் ஊர்க்காரர்கள் ' வேட்டை, வேட்டை' என்று எப்போதும் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருந்ததைக்கேட்டு  அந்த ஆர்வம் கிளர்ந்தெழுந்தது.

 பண்ணை வேலைகளைக் கவனித்துக் கொள்வதற்காக 'சக்திவேல்' என்ற எங்களின் ' மச்சான் ' ஒருவர்  எங்கள் வீட்டில் இருந்தார்.;[ இவரைப் பற்றி நான் ஏற்கனவே எழுதியிருந்ததை ' மணிமாறன் மாமா கதை சொன்னார் ' பக்கங்களைப் படிக்க நேர்ந்திருந்தால் கவனித்திருக்கலாம்.]

இவர் 'மோட்டார்' என்று ஒரு நாய் வளர்த்தார்.அந்தக் காலத்தில் 'காரை' மோட்டார் என்றுதான் அழைத்தார்கள். அந்த மோட்டார் போல இந்த நாய் வேகமாக ஓடியதால் நாய்க்கு மோட்டார் என்று பெயர். இந்த மோட்டாருக்கு சிறப்புச் சாப்பாடு கொடுத்து ஆழமான குளத்தில் நீந்த வைத்து மச்சான் விசேசப் பயிற்சிகள் கொடுத்ததைப் பார்த்து வேட்டையில் நானும் கலந்து கொள்ள அவரிடம் அனுமதி கேட்டேன்.

' காட்டுக்குள்ள முள்ளுல நடப்பியா ..? ' என்று கேட்டு விட்டு கூட்டிப் போவதாக ஒத்துக் கொண்டார்.

அந்த நாளும் வந்தது.

அன்று ஒரு ஊர் இல்லை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆறு கிராமத்து வேட்டைக் காரர்கள் கூடினார்கள்.அந்தக் கூட்டம் காட்டுக்குள் புகுந்து கிராமங்களைத் தாண்டிச் சென்றபோது மேலும் மேலும் ஆட்கள் சேர்ந்து இறுதியாகச் சுமார் முன்னூறு பேர்களும் நூறு நாய்களுமாகத்  திரண்டது.

இங்கே காடு என்று சொல்லப்படுவது மழைக் காடுகளோ அல்லது மலைக் காடுகளோ அல்ல.சில மரங்களும் குட்டைப் புதர்களுமானவைதான் அவை. அந்த நாய்கள் தாம் எங்கே போகிறோம் என்பதை உணர்ந்து கொண்டு  இயல்புக்கு மாறாக அன்று  மிக ஆக்ரோஷமாக இருந்தன.

வேட்டைக்காரர்கள் 'வேட்டைகம்பு ' என்ற இரும்புப் பூண்கள் போட்ட கைத்தடிகளையும்  'குத்துக்கம்பு' என்று சொல்லப்பட்ட ஈட்டி செருகிய நீண்ட கழிகளையும் ஆயுதமாக வைத்திருந்தார்கள்.

ராணுவப் படையினர் ' Combing operation ' செய்வதைப் போல நீண்ட வரிசையில் சென்ற அவர்கள் குத்து கம்பால் புதர்களைக் கலைத்தார்கள்.பதுங்கியிருந்த முயல்கள் பயந்து வெளியே பாய , வேட்டைக்காரர்கள் கூச்சலிட்டபடி பிடித்திருந்த நாய்களை அவைகளை நோக்கி ஏவி விட , முரட்டுப் பாய்ச்சலில் விரட்டிச் சென்ற நாய்கள் முயல்களை நெருங்கி காலால் தட்டி விடுகின்றன. தடுமாறி உருளுகின்ற முயல்களைக் கவ்விப் பிடித்துக் கொண்டு எஜமானர் ஓடிவந்து எடுத்துக் கொள்ளும்வரையில் காத்திருக்கின்றன.

அங்கேயோ அல்லது வேட்டை முடிந்ததுமோ நாய்களுக்கு முயலின் குடலும் கழிவு மாமிசமும் சாப்பிடக் கிடைக்கின்றன.

நாய்கள் ஒரு முயலைத் துரத்திச் சென்றால் நாய்களைக்  கம்பு தாக்கிவிடலாம் என்பதற்காக வேட்டைக்காரர்கள் வேட்டைக்கம்புகளை வீசுவதில்லை. இப்படி ஒரு முறை நடந்து இரண்டு ஊர்களுக்கிடையே பெரிய கலவரம் நடந்ததாகச் சொன்னார்கள்.

அப்படியில்லாமல் கூட்டத்தைக் கண்டு மிரண்டு எங்கிருந்தோ ஓடிவருகின்ற முயல் ஒன்று கண்ணில் பட்டால் அதை நோக்கிக் குறிபார்த்து  வேட்டைக் கம்புகளை வீசுகிறார்கள். முயல்கள் சுருண்டு விழுகின்றன. 

பெரும்பாலும் அனுபவம் மிக்க சிறப்புத் திறமை கொண்டவர்களே இந்தக் கம்புகளை வீசுகிறார்கள்.நமது சக்திவேலும் அதில் ஒருவர்.அதனால் அவருக்கு மற்றவர்களை விட அதிகமாகவே வேட்டை கிடைத்தது.

முயல்கள் மட்டுமல்லாமல் நரிகளும் பாம்புகளும் புதர்களுக்குள்ளிருந்து 
புறப்பட்டுப் பாய்கின்றன.ஆனால் அவைகளை யாரும் கண்டுகொள் வதில்லை.

வழியிலிருந்த சிற்றோடைகளிலும் குளங்களிலும் வேட்டைக்காரர்கள் தண்ணீர் குடித்தார்கள்.மாலை ஐந்து மணி போல வேட்டை நிறுத்தப் பட்டது.ஏதேனும் ஒரு நல்ல இடம் தேர்வு செய்யப்பட்டது.சிலர் எங்கோ சென்று சமையல் பாத்திரங்கள் இரவல் வாங்கி வந்தார்கள்.சிலர் அருகில் உள்ள கடைகளுக்குச் சென்று அரிசி ,சமையல் பொருட்கள் வாங்கி வந்தார்கள்.

 பனை ஓலையில் செய்யப்பட ' பட்டை ' எனச் சொல்லப் படுகிற  ஒருமுறை பயன்படுத்துகிற use & through சாப்பாட்டுப் பாத்திரங்கள் தயாராக முயல் கறியோடு சாப்பாடு நடந்தது. அடுத்த வேட்டைக்கான நாளும் அங்கேயே முடிவு செய்துகொள்ளப் பட்டது.எல்லோரும் அங்கேயே தூங்கி எழுந்து மறுநாளும் வேட்டை தொடருமாம்.

ஆனால் என்னால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதனால் எனக்காக சக்திவேல் மச்சானும் ஊருக்குக் கிளம்பினார்.அவர் புறப்பட்டதும் எங்கள் ஊர்க்காரர்கள் எல்லோருமே கிளம்பிவிட்டார்கள்.

ஊரை நெருங்கியதும் வேட்டை முயல்கள் எல்லாவற்றையும் இறைச்சியாக்கி கூடக் குறைய என்ற வேறுபாடு எதுவுமில்லாமல் எல்லோரும் சரிசமமாகப் பிரித்துக் கொண்டார்கள்.அன்று இரவு மச்சான் எங்கிருந்தோ ரகசியமாகச் சாராயம் வாங்கிவந்து குடித்துவிட்டு முயல் கறி சாப்பிட்டார்.

இப்போது இதெல்லாம் பழங்கதையாகி விட்டது.அரசாங்கம் வேட்டைக்குத் தடை போட்டுவிட்டது. தடையை நீக்கினாலும் கூட எங்கள் கிராமத்து ஆண்களுக்கு வேட்டைக்குப் போக விருப்பம் இல்லாத அளவுக்கு அவர்களின் சிந்தனையையும் நேரத்தையும் அரசாங்கத்தின் டாஸ்மாக் கடைகள் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டன.

காட்டில் முயல்கள் மட்டுமில்லாமல் இப்போது நமது தேசியப் பறவையான மயில்களும் பல்கிப் பெருகி விட்டன.


















சனி, 24 ஆகஸ்ட், 2013

செல்லநாய் வைத்திருக்கிறீர்களா ..? ஒரு நிமிடம்.










செல்ல நாய் வளர்ப்போருக்கும் நாய்களின் மீது மட்டுமல்லாமல் விலங்குகளின் மீதும்  ஈடுபாடு கொண்டவர்களுக்கும் இந்தப் பதிவு சுவாரஷ்யமாக இருக்கும் என்று நம்பி இதைப் பதிகிறேன்.

நாய் புல் தின்னுமா..?

என்னுடைய அனுபவத்தில் நாய் புல் தின்னும் என்பதை கண்டிருக்கிறேன்.

நம்மால் அறிந்து கொள்ள முடியாத இயற்கையின் விந்தைச் செயல்களில் இதையும் ஒன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறேன்.

என்னுடைய செல்ல நாய் டேனியை நடைப் பயிற்சிக்குக் கூட்டிச் செல்லும்போது சில நாட்களுக்கு ஒருமுறை அது புல்தரையைத் தேடிப்  போகிறது.அங்கே முகர்ந்தும் தேடியும் பார்த்து ஒரு வகைப் புல்லைக் கண்டுபிடித்துக் கடித்துத் தின்கிறது.

ஆரம்பத்தில் இது எனக்கு விநோதமாக இருந்தாலும் அனுபவத்தில் போகப்போக உண்மையைப் புரிந்துகொண்டேன்.

டேனிக்கு வயிற்றில் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் அது என்னிடம் எதுவும் சொல்லாமல் [ ? ] தானே புல்தரையைத் தேடிப்போனது.அது புல்லைச் சாப்பிட்டபிறகு வயிற்றுப் பிரச்னை சரியானது.

 புல்  சாப்பிடும் டேனியின் இந்தப் பழக்கம் எனக்கு மருத்துவர் செலவைக் கணிசமாகக் குறைத்தது.

தன்னுடைய நோயைத் தானே தீர்த்துக் கொள்ளும்படிக்கு  இந்த வாயில்லாத உயிர்களுக்கு இயற்கை இன்னும் என்னவெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கிறதோ....? ஆச்சரியம்தான்.

அதனால் செல்லநாய் வைத்திருப்பவர்கள் அதை புல்தரைப் பக்கமாகக் கூட்டிப் போக வேண்டுமென்பது எனது தாழ்மையான கோரிக்கை.ஆனால் புல் சுத்தமாக இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்னுமொரு வேடிக்கையான விஷயத்தையும் இங்கே கொசுராகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இயக்குனர் மற்றும் 'நாம் தமிழர் ' கட்சியின் நிறுவனர் சீமான் அவர்களின் செல்ல வளர்ப்புகளான ' கார்க்கி', மற்றும் 'கயல் ' ஆகிய இருவரின் பிள்ளைகளில் ஒன்றை கண் விழித்து சில நாட்களே ஆன நிலையில் நான் எடுத்து வந்தபோது அது ஆணா பெண்ணா என்று புரிந்து கொள்ள முடியாமல் அப்போது புகழின் உச்சத்தில் இருந்த சானியா மிர்சாவின் மீது நாங்கள் கொண்டிருந்த அபிமானத்தால் அதற்கு 'சானியா' என்று பெயர் வைத்தோம்.

அப்புறம்தான் தெரிந்தது அது ஆண் என்பது. இதற்குள் செல்லக்குட்டி நாய் சானியா என்ற பெயருக்குப் பழகிக் கொண்டுவிட்டது.

 இப்போது என்ன செய்வது..?

 சானியா என்ற ஓசைக்கு ஒத்துப்போவதுபோல ரஷ்யப் பெயர் ஒன்றைக் கொண்டு ' டான்யா' என்று பெயரை மாற்றினோம்.அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்கி 'டானி' என்று அழைத்தோம்.இறுதியில் அது 'டேனி 'யானது.

இது எங்களின் செல்லக்குட்டி  டேனி பெயர் பெற்ற கதை. வேடிக்கைதான்.இல்லை..?




ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

'கிவ் மி சம்திங் ப்ளீஸ் '











புதுக்கோட்டை வழியாக ரயில் பயணம் செய்தவர்களுக்கு அல்லது செய்பவர்களுக்கு படத்தில் இருக்கின்ற இந்த நாய் ஒருவேளை பரிச்சயம் ஆகியிருக்கலாம்.

எங்கோ வசிக்கின்ற இந்த நாய் சரியாக ரயில் வரும் நேரத்துக்கு ரயில் நிலையத்துக்கு வந்து விடுகிறது.ரயில் நிலையத்தில் நிற்கின்ற சில நிமிடங்களில் இது ஒவ்வொரு பெட்டியாகப் போய் இந்த மாதிரி உட்கார்ந்து கொண்டு 'ஏதாவது சாப்பிடக் கொடுங்களேன் 'என்பது போல மவுன மொழி பேசுகிறது.

நாய்க்கு அதிர்ஷ்டமும் அந்த நேரத்தில் சிற்றுண்டியோ அல்லது பிஸ்கட்டோ சாப்பிடுகின்ற நம்மவர்களுக்கு இரக்கமும் இருந்தால் அதற்க்கு ஏதேனும் கிடைக்கிறது.

 கிடைக்கவில்லையானாலும் நாய் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறது..எல்லாம் நம்பிக்கைதான்.

யாரோ இரக்கப்பட்ட ஒரு ரயில் பயணி புண்ணியவான்தான் இந்த நாய்க்கு இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் .இல்லையா..?

புதுக்கோட்டை வழியாக ரயில் பயணம் போகிறீர்களா ? ஒரு பிஸ்கட்  பாக்கெட் வாங்கிப் போங்கள் 



எங்க வீட்டுல மீன் சாப்பாடு
















சென்னை மதுரவாயலில் இருக்கின்ற பெரிய மீன் அங்காடியில் எடுத்த படம் இது.

இந்தச் சிறுமி என்ன செய்கிறாள் தெரியுமா ..? தன் குடும்பத்திற்கான இன்றைய உணவைச் சேகரிக்கிறாள்.  

எப்படி..?

கெட்டுப்போன மீன்களை வியாபாரிகள் வெளியே வீச அந்தக் கழிவிலிருந்து தனது பார்வையில் சிறந்ததாகத் தெரிபவைகளை பொறுக்கி எடுத்து வீட்டுக்குக் கொண்டு செல்கிறாள்.

அவர்களின் வீட்டில் இன்று மீன் சாப்பாடு.

திங்கள், 15 ஜூலை, 2013

மரமே தெய்வம்



மரமே தெய்வம்







எங்கள் சிற்றூரில் நடந்த உண்மை நிகழ்வு இது.தெருமுக்கு ஒன்றில் மாரியம்மனுக்கு சிறு கோவில் அமைப்பதாக ஊர்க்காரர்கள் முடிவு செய்து வேலையைத் தொடங்கினார்கள்.கட்டிடம் அமைக்கப் பட்டது.அம்மன் சிலையை நிறுவுவதற்கு நல்லநாள் ஒன்றுக்காக ஊரார் காத்திருந்த வேளையில் சரியாக சிலை வைப்பதாக இருந்த இடத்தில் மரக்கன்று ஒன்று முளைத்து வளர்ந்தது.எந்தவொரு நீர் ஆதாரமும் இல்லாமல் வளர்ந்த அது சில நாட்களில் செடியாகி நின்றது.

நாம் கிராமத்துக்குச் சென்றிருந்தபோது கண்ணில் பட்ட இந்தக்காட்சி எம் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது.இதில் மிகவும் வியக்கச் செய்த விஷயம் என்னவெனில் சாமி இருக்க வேண்டிய இடத்தில் முளைத்து நின்ற அந்தச் செடியை யாரும் பிடுங்கி எறியவில்லை. மாறாக செடி அப்படியே இருக்க மக்கள் காலை நேரத்தில் வாசலில் கோலமிட்டார் கள்.மாலை நேரத்தில் விளக்கேற்றினார்கள்.வணங்கினார்கள்.வயலில் விளைந்த முதல் நெற்கதிரைக் காணிக்கையாக்கினார்கள்.

இந்தச் செயல்கள் எம் நெஞ்சை நெகிழச் செய்தன.மனதுக்குள் சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்தன.

ஆதித் தமிழ்மக்கள் காலம் தவறாது நீர் பொழிந்து தம்மை வாழ வைக்கின்ற மாரிக்கு [ மாரி  - மழை ] நன்றி செலுத்தும் விதமாக அதைத் தெய்வமாக்கி அதற்கு ஒரு உருவம் தந்து மாரியம்மன் எனப் பெயரும் சூட்டி கோவில் கட்டிப் பொங்கலிட்டு பூசை செய்து முளைப்பாரி எடுத்து முளைக்கொட்டு செய்து விழா எடுத்தார்கள்.மிக உன்னதமான இயற்கை வழிபாடான இந்தச் செயல்கள் இன்றும் தொடர்கின்றன.

மழைக்கு ஆதாரம் மரம்.மரத்துக்கு மூலம் மழை.இந்த உயிர்ச்சங்கிலித் தொடர்பினை உணர்ந்திருந்தனால்தான் நம் முன்னோர்கள் மரத்துக்கும் ஆடை அணிவித்து அலங்காரம் செய்து அதையும் தெய்வமாக்கியிருந்தார்கள் .

இப்போது இங்கே எமது கிராமத்தில் அறிந்தோ அறியாமலோ நிகழ்ந்த எம் மக்களின் செயல்களைக் கண்டபோது ஆதியில் எம் மூதாதையர் கொண்டிருந்த மரபணுக் குணங்களில் இப்போது பெரிதான மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை என்பதற்கான அடையாளமாகத்தான் தெரிந்தன.உண்மையில் மனம் பெருமிதத்தில் மிதந்தது.

உணவுக்காகவே உழைக்கிறோம்.உழைத்து ஈட்டிய பணத்தைக் கடையில் கொடுத்தால் உணவு தருவர். உயிர்க்காற்று யார் தருவார்..?

ஒரு கன்று நட்டு நீரூற்றி பேணிப் பாதுகாத்து அதை உயிர்க்காற்று தருகின்ற ஒரு மரமாக மாற்றுவதைக் காட்டிலுமான உயர்ந்த வழிபாடு வேறொன்றுமில்லை.

நம்மை வாழவைக்கும் மகாசக்திகள் மாரியும் மரமுமே.மாரியின்றி மரமில்லை.மரமின்றி மாரியில்லை.

மரங்களே தெய்வம்.மரம் வளர்ப்போம்.நம் மண் [பூமி ] ணைக் காப்போம்.









புதன், 29 மே, 2013

அய்யனாரின் குதிரை









தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் புகைவண்டியிலோ பேருந்திலோ பயணம் செய்யும்போது சாளரத்தின் வழியாக ஒரு வியப்பூட்டும் காட்சியை நீங்கள் கண்டிருக்கலாம்.ஊருக்கு வெளியே அனேகமாக பனை மரங்களும் வெப்ப மரங்களும் அடர்ந்திருக்கின்ற  இடத்தில் அமைந்திருக்கின்ற ஒரு சிறு கோவிலுக்கு அருகே பெரிய மீசையோடு கையில் வெட்டரிவாள் தாங்கி ஆஜானுபாகுவாக ஒரு வீரன் பயமுறுத்தும் பார்வையோடு ஒரு குதிரையின் முதுகில் அமர்ந்திருக்க ,பாய்ந்து கிளம்ப தான் எப்போதும் தயார் என்பது போல நின்றிருக்கின்ற அந்த பன்னிரண்டு அடி உயர சுடுமண் குதிரையைத்தான் நாம் இங்கே குறிப்பிடுகிறோம் 

இப்படி ஒரு காட்சியை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? அப்படிப்  பார்க்கும் போது உங்களுக்குள்ளே சில கேள்விகள் எழும்பியிருக்கின்றனவா?

' யார் இந்த அரிவாள் வீரன் .?.....இந்தக் குதிரையை யார் செய்கிறார்கள்..?... எப்படிச் செய்கிறார்கள்..?...எவ்வளவு காலமாக இந்தக் குதிரை இங்கே நிற்கிறது..? '

இப்படியெல்லாம் இயல்பாக எழும்புகின்ற  சில கேள்விகளுக்குத்தான் நாம் இப்போது இங்கே விடை காணப் போகிறோம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக நம் தமிழ் மக்கள் இந்த சுடுமண் குதிரைகளைச் செய்து வருகிறார்கள்.மிகப் பழமையானதும் உலகம் முழுவதும் பரவியதுமான மண்பாண்டக் கலையின் ஒரு அங்கமே இந்த சுடுமண் குதிரைகள்.புதிய கற்காலத்திலிருந்தே தமிழ் மக்கள் மண்பாண்டக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்திருக்கிறார்கள்.

' உலகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வுகளின்படி இந்தியாவில் நாம் கண்ட உட்புறம் எதுவுமில்லாத [HOLLOW]மிகப்பெரிய அளவிலான களிமண் சிற்பங்களே மிகச் சிறப்பானவையாகும்' என்று புகழ் பெற்ற வரலாற்றாசிரியர் ஸ்டீபன் இங்லிஸ் சொல்கிறார்.

தென்னிந்தியக் கிராமங்களில் மிகப்பெரிய கட்டுமானங்களோ ஆடம்பரமோ இல்லாத எளிமையான ஆனால் அழகான சிறு கோவில்களை நாம் நிறையக் காணலாம்.இவைகளைக் கோவில்கள் என்று சொல்வதை விட சன்னதிகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.இந்தச் சன்னதிகள் அய்யனாருக்காக எழுப்பப் பட்டிருக்கின்றன.

'அய்யனார்' என்பவர் ஆரிய வேத காலத்துக்கு முந்தைய தமிழ்த் தெய்வம். இவர் எல்லா வகைகளிலும் தமிழ்க் கிராமங்களின் நலன்களோடு தொடர்புடையவர்.பண்டைய தமிழ்க் கலாசாரத்தின்படி அய்யனார் தமிழ்க் கிராமங்களின் பாது காப்பாளராக இருக்கிறார்.

ஏதோ ஒரு காலத்தில் ஓரிடத்தில் குடியேறி கூட்டுச் சமுதாயமாக வாழ்ந்த மக்களோடு அவர்களுக்குள் ஒருவராய் வாழ்ந்து அவர்களுக்கு ஆலோசகராக, வழிநடத்துபவராக , பாதுகாவலராக இருந்து ஏதோ ஒரு வகையில் அவர்களுக்காக உயிர் கொடுத்த  ஒருவரை அவருடைய இறப்புக்குப் பிறகு தெய்வமாக வழிபடுவது திராவிடக் கலாசாரத்தின் ஒரு சிறப்பான அம்சமாகும்.

.இந்த வகையில் ஒரு சமுதாயத்தின் முன்னோடியாக வாழ்ந்து சென்ற ஒருவரையே  நம் மக்கள் அய்யனாராக தெய்வ அரியாசனத்தில் அமர்த்தினார்கள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்து சமயமாக நாம் ஏற்றுக் கொண்ட ஒரு புதிய வழிபாட்டு முறை நமக்கு பல கடவுள்களை அறிமுகப் படுத்தியதற்கு முன்பாக தமிழ்க் கிராமங்களில் அய்யனார் வழிபாடுதான் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது.

' அய்  ' என்ற தமிழ்ச் சொல்லுக்கு ' மூத்தவர் ' என்பது பொருளாகும்.சங்க இலக்கியங்களில் இந்த சொல் ' தலைவன் ', ' தந்தை ' , ' மூத்த தமையன் ' .
' நாயகன் ' மற்றும் ' கணவன்' ஆகிய பொருள்கள் தரும்படி கையாளப்
பட்டிருக்கிறது.' அய்யன்', 'அய்யை ', 'அய்யர் ' ,'அய்யனார்' ஆகிய சொற்களின் தோற்றத்துக்கு ' அய் ' என்பதே முதலாக இருந்திருக்கிறது.

துவக்க கால சங்க இலக்கியங்களான ' அக நானூறு ' , 'பதிற்றுப்பத்து ',' நற்றிணை '  ஆகியன 'அய்யன் ' என்ற சொல்லை மூத்த தமையன் என்ற பொருள் தரும்படியும் ' அய்யர்' என்ற சொல்லை பன்மையில் மூத்த தமையர்கள்  மற்றும் 'சாதுக்கள்' ,' முனிவர்கள் ' என்று பொருள் தருமாறும் பயன்படுத்தியுள்ளன.

பாரம்பரிய கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை பேணிப் போற்றும் வகையில் அமைந்ததே நம் முன்னோர் மேற்கொண்டிருந்த அய்யனார் வழிபாடு .வேறு வேறான தனிப்பட்ட குண நலன்களைக் கொண்ட பல்வேறு மனிதர்களைக் கொண்டிருந்தாலும் அனைவரையும் ஒன்றுபோல அனுசரித்துப் போவதே நல்ல கூட்டுக் குடும்ப சமுதாய அமைப்பாகும்

அய்யனார் சன்னதிகளில் அய்யனாருக்கு மட்டுமல்லாமல் வேறு வேறான நல்ல மற்றும் தீய சக்திகளைக்  கொண்ட பல்வேறு தெய்வங்களுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.' கருப்பசாமி ', 'முனியன் '.'சுடலை மாடன்' , 'மதுரை வீரன்' என்று இடத்துக்குத் தகுந்தவாறு தெய்வங்களும் இவர்களோடு கூட அந்தந்தக் குடும்பத்தினரின் குல தெய்வங்களும் அங்கே சன்னதி கொண்டிருந்தார்கள்.

தம் மக்களைக் காப்பதிலும் குறைகளை நிவர்த்தி செய்வதிலும் கருப்பசாமி அய்யனாருக்கு அடுத்த இடத்தில் இருந்து அவருடைய படைத்தளபதியாக செயல்பட்டார்.மற்றவர்கள் அய்யனார் இடும் ஆணைகளை நிறைவேற்று கின்ற போர்வீரர்களாக இருந்தார்கள். அய்யனாரையும் கருப்பசாமியையுமே நாம் இங்கே வெட்டரிவாளோடும் வீச்சரிவாள் மீசையோடும் குதிரை மீது வீற்றிருக்கக் காண்கிறோம்.

வெட்டரிவாள் மக்களுக்கு கெடுதல் விளைவிக்கும் தீய சக்திகளை வெட்டி வீழ்த்துகின்ற ஆயுதமாகவும் வீச்சரிவாள் மீசை அந்த சக்திகளைப் பயமுறுத்துகின்ற எச்சரிக்கை அடையாளமாகவும் விளங்குகிறது.

கூட்டுக் குடும்ப சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆண்டுக்கொருமுறை தவறாமல் அய்யனாரின் சன்னதியில் கூடுகிறார்கள்.ஆட்டுக்கிடாய் வெட்டி ,பொங்கல் வைத்து ஐயனாருக்குப் படைத்து அதன்பிறகு தாமும் உண்டு கூடிப்பேசி மகிழ்ந்து வீடு திரும்புகிறார்கள்.இதன் மூலமாக ஓராண்டு காலமாக அவர்களிடையே நிரவிக்கிடந்த வேற்றுமைகள் களையப்பட்டு உறவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு கூட்டுச் சமுதாய வாழ்க்கை முறை மீண்டும் மீண்டும் புத்தாக்கம் செய்யப்படுகிறது.

தகுந்த வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதிலும் நோய் நொடிகளைத் தீர்ப்பதிலும் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதிலும் செய்யும் தொழிலைச் சீர் படுத்துவதிலும் முன்னிலை வகித்து அய்யனார் தம் மக்களின் வாழ்வுகாலம் முழுமைக்கும் துணையாக நிற்கிறார். மக்கள் அய்யனாரிடம் வைக்கின்ற கோரிக்கைகளுக்கும் வேண்டுதல் களுக்குமான பதில்கள் சன்னதியில் ' சாமியாடிகள் ' மூலமாகவும் கனவுகள் மூலமாகவும் கிடைக்கப் பெறுகின்றன.

அய்யனார் சன்னதியில் அய்யனாருக்கு சேவை செய்பவர்கள் வேளார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.வேளார் மக்களின் முதன்மைத் தொழில்  மண்பாண்டங்கள் செய்வது. மண்ணைக்கொண்டு அவர்கள் படைத்த தெய்வ உருவங்களின் நேர்த்தி இந்தத் திறன் கடவுள் அவர்களுக்கு பிரத்தியேகமாகக் கொடுக்கப்பட்ட வரமாகக் கருதச் செய்தது. அய்யனாருக்கும்  கருப்பசாமிக்கும்  அவர்களே  உருவம் கொடுத்தார்கள். உருவம் தந்தவர்களே அவர்களுடன் உறவாடும் உரிமையையும் பெற்று பூசாரிகள் ஆனார்கள்.

விழாக் காலங்களில் பூசாரிகள் சிறப்பு விரதமிருந்து அய்யனாருக்கும் மக்களுக்கும் இடையே தொடர்பாளர்களாகின்ற 'சாமியாடிகள் ' ஆவார்கள். தாரை தப்பட்டைகளும் கொட்டுமேளங்களும் துரிதகதியில் முழங்க அந்த அசுர சந்தம் மக்களின் உடல்களில் புல்லரிப்பையும் மயக்கத்தையும் ஏற்படுத்தி ஒருவித மோன நிலையை உண்டாக்கி தெய்வங்களின் நேரடியான தரிசனத்தையும் கடாட்சத்தையும் சாத்தியமாக்குகிறது.

அய்யனாரின் சார்பிலே சாமியாடிகள் குறைகேட்ட மக்களுக்கு நிவாரணத்தைச் சொல்லி விபூதி தந்து அருளாசி வழங்குகிறார்கள். தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வைத்ததற்காக அய்யனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக மக்கள் கோழிகளையும் சேவல்களையும் கால்நடை களையும் சன்னதியில் விட்டுச் செல்கிறார்கள். அய்யனாரின் ஆயுதமான அரிவாளை பெரிய அளவில் செய்து வைக்கிறார்கள்.வேளார்களைக் கொண்டு மண்ணால் பறவைகள்,கால்நடைகளின் உருவங்களைச் செய்வித்து அவற்றை காணிக்கையாகப் படைக்கிறார்கள்.

இரவு நேரங்களில் அய்யனாரும் கருப்பசாமியும் வெள்ளைக் குதிரையிலேறி கிராமத்தை வலம் வந்து ஊர்க்காவல் புரிவதாக மக்கள் நம்புகிறார்கள். அமானுஷ்யமான அந்தக் குதிரையைக் கற்பனை செய்து அதற்கு பிரமாண்ட உருவம் கொடுத்து அதைச் சன்னதியின் முன்பாக நிறுத்தி அழகு பார்த்து ஆத்ம திருப்தி பெறுகிறார்கள். ஆண்டாண்டு காலமாக அந்தக் குதிரை அங்கே நிற்கிறது.மழையாலும் வெயிலாலும் காற்றாலும் பனியாலும் அது சிதிலமடையத் துவங்கும்போது புதிய குதிரை உருவாக்கப்படுகிறது.

ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பழமை கொண்ட சுடுமண் குதிரைகளைக் கூட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இப்போதும்  காணலாம். இந்தக் குதிரைகள் அவைகளைச் செய்தவர்களின் தொழில் நேர்த்தியை மட்டுமே பறைசாற்றிக்கொண்டிருக்கிறதே தவிர அந்த மனிதர்களின் அடையாளங்கள் எதையுமே தம்மிடம் கொண்டிருக்கவில்லை.

நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதற்காக மக்கள் தனிப்பட்ட முறையில் சிறிய அளவிலும் குதிரைகளைச் செய்து கொண்டுவந்து சன்னதியில் வைக்கிறார் கள்.' புரவி எடுப்பு ' [ என்ன அழகான தமிழ்ச் சொல் !]என்ற பெயரில் இது திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

அய்யனாரின் சன்னதியில் பூசாரிகளாக இருக்கின்ற வேளார் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இந்தக் குதிரைகளைச் செய்கிறார்கள். இதைச் செய்ய அவர்கள் வரைபடத்தையோ [ sketch ],அச்சையோ [ அச்சு -mould ] ,மாதிரியையோ [ model ] பயன்படுத்துவதில்லை  தமது சொந்தக் கற்பனைத் திறனை மட்டுமே கொண்டு வெறும் கைகளால் இந்தக் குதிரைகளை இவர்கள் உருவாக்குகிறார்கள். மண்ணும், களிமண்ணும், வைக்கோலும் ,நெல் உமியும் ,மூங்கில் பட்டைகளும் இவைகளின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வருந்தத்தக்க விஷயமாக சுடுமண் சிற்பங்கள் செய்வது இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது.அய்யனாருக்கும் கருப்பசாமிக்கும் குதிரைகள் செய்து வைப்பதாக மக்கள் செய்துகொள்ளும் வேண்டுதல்களே சுடுமண் சிற்பங்கள் செய்கின்ற வேளார்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. , இன்று தஞ்சாவூர்,புதுக்கோட்டை, மதுரை ,சேலம் மற்றும் சிதம்பரம் மாவட்டக் கிராமப் பகுதிகளில்  இந்த வேளார்கள் பரவலாக வாழ்ந்து வருகிறார்கள்.

அடுத்த பயணத்தின்போது ஆஜானுபாகுவான இந்த தமிழ்க் குதிரை ஒன்றை வழியில் பார்க்க நேரிட்டால் அதை உருவாக்கிய முகம் தெரியாத அந்த மனிதனின் தெய்வீகத் திறமைக்கு ஒரு வாழ்த்துச் சொல்லுங்கள்.குதிரை மீது அமர்ந்திருக்கின்ற அய்யனாரின் கண்களை உற்றுப்பாருங்கள்.அவைகளில் பயமுறுத்தல் மட்டுமல்லாமல் தம் மக்களின் மீது அவர் கொண்டிருக்கின்ற பாசமும் படிந்திருப்பதைக் கவனியுங்கள்.அவருக்கும் ஒரு வணக்கம் சொல்லுங்கள்.ஏனெனில் தனது கிராமத்து மக்களுக்கு மட்டுமல்லாமல் வழிப்போக்கர்களுக்கும் அவர் வழித்துணையாக வருகிறார்.












வெள்ளி, 3 மே, 2013

ஒத்தைக்கு ஒத்தை வர்றியா...?







வெகுநாட்களுக்குப் பிறகு மணிமாறன் மாமாவை அண்மையில் சந்தித்தேன்.லேசான மப்பில் இருந்த அவர் தனது மனக்குமுறல்களை என்னிடம் கொட்டித் தீர்த்து விட்டார்.அதை நீங்களும் கேளுங்கள்.



' இப்பல்லாம் வாழ்க்கையே பெரிய போராட்டமாப் போயிருச்சிப்பா. ரேஷன் கடையில, கரண்ட்டு பில்லு கட்டற இடத்திலே , டிரெயின் டிக்கட் வாங்கப்போற இடத்தில இங்கதான முந்தில்லாம் கூட்டம் கியூ கட்டி நிக்கும்..? இப்ப டாஸ்மாக் கடையில போய்ப்பாரு.போனமா காசக் குடுத்தமா குவாட்டர வாங்குனமான்னு வரமுடியலப்பா....இடிச்சி மோதிக்கிட்டு நிக்கிறானுங்க...

முந்தில்லாம் என்ன பண்ணுவோம்..?கடைக்குப்போயி ஒரு எம்சி குடு, ஒரு ஓல்டு மங்கு குடு அப்பிடீன்னுதான கேப்போம்..?இப்ப அப்பிடிக் கேட்டுப் பாரு..கான்டாயிருவானுங்க.ஒரு எழுபத்தஞ்சி குடு, ஒரு எம்பத்தஞ்சி குடு அப்பிடீன்னுதான் கேக்கணும்.

ஒரு நாளக்கி ஒரு சரக்கு வருதுப்பா..இதெல்லாம் டாஸ்மாக்குக்கு சரக்கு கொள்முதல் பண்ணுற ஆபீசருங்க பண்ற வேலைன்னு பேசிக்கிறாங்க. கம்பெனிக்காரன்கிட்ட கமிஷன் வாங்கிக்கிட்டு அந்தந்தக் கம்பெனி சரக்க ஏத்திக்கிட்டு வந்துர்றாங்கன்னு சொல்றாங்க.அதுவும் உண்மையாத்தான் இருக்கும் போலருக்கு.

முந்தில்லாம் எப்படி இருந்திச்சு..? எம்சிக்கு ஒரு தனி ருசி.. ஜானெக்ஷாவுக்கு ஒரு தனி ருசின்னு இருந்திச்சு.அந்த ருசி பழகிப்போன மனுஷன் அதது பேரச்சொல்லித்தான் வாங்குவான்.இப்ப தெனத்துக்கு ஒண்ணா என்னென்ன கருமாந்திரத்தையெல்லாம் குடிக்க வேண்டியிருக்கு..? இன்னொரு முக்கியமான விஷயம் தெரியுமா..?அப்பல்லாம் ரெகுலரா ஒரு சரக்குக்கு பழகிப்போன வயிறு பிரச்சினை ஒண்ணும் பண்ணாம இருந்துச்சு.இப்ப தெனம் ஒரு எழவக் குடிக்கிறமா ..காலையில பாத்ரூம் போறதுல பிரச்னையா யிருக்கு.

அப்பல்லாம் தடுமன் புடிச்சா ஜானகஷாதாம்பா மருந்து.சுடுதண்ணி ஊத்திக் கலந்து அதுல கொஞ்சம் மிளகுத்தூளைப் போட்டு ஒரே மடக்குல குடிச்சுட்டோம்னா மறுநாள் காலைல தடுமன் எங்கே போச்சுன்னே தெரியாதுல .பேக்பைப்பர்,கோல்கொண்டா,ஓல்டு காஸ்க்கு,மெக்டோவல்னு அதுங்க பேரச்சொன்னாலே ஒரு தெம்பு வரும்.இப்ப பேர் சொல்ற மாதிரி எதாவது இருக்கா சொல்லு..?

சரி,அடுத்த விஷயத்துக்கு வா..

அப்பல்லாம் என்ன பண்ணுவோம்..?...ஒரு குவாட்டர்  வாங்குவோம் .ஒரு டம்ளர் வாங்குவோம் ..இரு..இரு ..இங்க இன்னொரு விஷயம் சொல்லிக்கிறேன்.ஆமா..,இந்த பிளாஸ்டிக் கப்ப எல்லாரும் கிளாஸ்,கிளாஸ்னு சொல்றாங்களே அது எப்பிடி..?கிளாஸ்னா என்ன..? கண்ணாடிதானே..? கண்ணாடிக் கிளாஸத்தானே கிளாஸ்னு சொல்லணும்.அதுனால நான் எப்பவும் டம்ளர்னுதான் சொல்றது...ம் ..ஒரு குவாட்டர் வாங்குவோம்,ஒரு டம்ளர் வாங்குவோம்,ஒரு வாட்டர் பாக்கட் வாங்குவோம்.அப்பிடி ஓரமா உக்காந்து குடிச்சுட்டுப் போவோம்.

இப்ப அப்பிடியா சொல்லு..? குவாட்டர வாங்கிகிட்டு எவனாவது தண்ணிப்பாக்கட்டுல மிச்சம் ஏதாவது வச்சிட்டுப் போயிருக்கானான்னு பாக்க வேண்டியிருக்கு..வேற என்ன பண்றது..? 35 காசு தண்ணிப் பாக்கட்டயும் டம்ளரையும்  பார்க்காரன் அஞ்சு  ரூபாய்க்குல்ல விக்கிறான்.பார்க்காரன்கிட்ட கொஞ்சம் பழகிப்பார்த்திங்கன்னாத் தெரியும்..,ஊர்ல அவன் பத்து லட்சத்துல புது வீடு கட்டிக்கிட்டிருக்கற விஷயம்..

அப்பல்லாம் வேலை முடிஞ்சி 10 மணிக்கு மேலதான் டாஸ்மாக்குக்குப் போகமுடியும். இருந்து மெதுவா குடிச்சிட்டு வருவோம்.இப்ப அது முடியுதா..?

மருத்துவர் ஒருத்தர் சொன்னாருன்னு இந்த மஞ்சத்துண்டுப் பெரியவர் பத்து மணிக்கு கடையை மூட வச்சாரு.அதனால பத்து மணிக்கு மேல யாரும் குடிக்காம விட்டுட்டாங்களா..? பார்க்காரனும் கடை சேல்ஸ்மேனும் கள்ளக் கூட்டணி போட்டுக்கிட்டு குவாட்டர் 120 ரூபாய்க்கு விக்கிறானுங்க. அதையும் வாங்கிக் குடிச்சுக்கிட்டுத்தானே இருக்கோம்..? குடிக்கிறதுல குறைவு இல்ல..எதுக்கு தேவையில்லாத செலவும் டென்ஷனும்னு கேக்கறேன்...இரு.. இந்த இடத்தில இன்னொரு விஷயத்தையும் சொல்லிடுறேன் கேளு..

கேரளாவுக்குப் போயிருக்கியா நீ..? அங்க ஒம்போது மணிக்கு கடை மூடிருவாங்க.ஆனா ஒம்போது மணிக்கு வந்தவங்கள கடைக்கு உள்ள கூப்பிட்டுக்கிட்டு வெளிய மூடிருவாங்க.எல்லோருக்கும் சரக்கைக் கொடுத்து அனுப்பிவிட்டு பூட்டிருவாங்க.பிளாக்குல எல்லாம் விக்குறதில்ல .அது சட்டம். அடுத்த மேட்டருக்கு வருவோம்.

அப்பல்லாம் அறுபது ரூபா இருந்தாப் போதும்.ஒரு குவாட்டரு அடிக்கலாம்.சுருக்குன்னு இருக்கும்.இப்ப ஒரு நாளைக்கு ஒரு விலையால்ல  இருக்கு.கம்பெனிக்காரன் ஒரு விலை போட்டிருக் கான்,கடைக்காரன் ஒரு விலை சொல்றான்.சரக்கும் வடிவேலு சொன்னமாதிரி சப்புன்னு இருக்கு. பத்தாததுக்கு பார்க்காரன் கொள்ளை வேற. குறைஞ்சது நூறு ரூபா வேணும்பா. கையில காசு இருந்தா உத்தமம். இல்லேன்னா ஒண்டிக்கு ஒண்டிதான்.

ஒண்டிக்கு ஒண்டின்னதும் ஏதோ சண்டைக்குக் கிளம்பிடுவேன்னு நினைச்சி ராத..அது எங்க குடிமக்களுக்குள்ள ஒரு கோட்வேர்டு .அதாவது ஊர்ல ஏதாவது சண்டை வந்துட்டா 'ஒத்தைக்கு ஒத்தை போட்டுப் பார்ப்போமா..?' ன்னு சவால் விடுறது வழக்கம் தெரியுமில்ல..? இந்த 'ஒத்தைக்கு ஒத்தை', ' ஒண்டிக்கு ஒண்டி ' இதுக்கெல்லாம் அர்த்தம் என்னன்னு தெரியுமா..? 'நீ ஒருத்தன், நான் ஒருத்தன் .ஒருத்தனுக்கு ஒருத்தன் .மோதிப்பார்க்கலாமா? ' ங்கறதுதான் . அதுமாதிரி 'நீ ஒருத்தன்.உன்கிட்ட பாதிப்பணம். நான் ஒருத்தன்.என்கிட்டே பாதிப்பணம்.ரெண்டையும் சேர்த்து ஒரு குவாட்டர் வாங்கி  ஆளுக்கு ஒரு கட்டிங் அடிக்கலாமா..?' அப்படீன்னு ஜாடையாக் கேட்டுக்கிறதுதான் இந்த ஒண்டிக்கு ஒண்டி, ஒத்தைக்கு ஒத்தை இதெல்லாம்.

..' குடியாதவன் வீடு விடியாது ' ன்னு பழமொழி எங்கேயாவது கேள்விப் பட்டிருக்கியா..? இது பழமொழியில்ல..எங்க மக்களுக்குள்ள புழங்கற ஒரு புது மொழி.

இடையிலே ஒரு நாலு மாசத்துக்கு முன்னாலே டாஸ்மாக்கையே அம்மா மூடப்போறதா ஒரு புரளி கிளம்பிச்சு தெரியுமா..? நாங்கல்லாம் அப்படியே திகிலடிச்சுப் போயிட்டோம்.என்ன பண்ணப்போறோமுன்னே தெரியாம அரண்டு போயிட்டோம்.நல்ல வேலை, அம்மா அப்படியெல்லாம் செஞ்சிடலை.ஒரு வேலை அப்படிச் செஞ்சிருந்தாங்க ன்னு வையி...அடுத்த எலக்சன்ல நாங்க அவுங்களுக்கு ஓட்டுப்போட மாட்டோம். குடிக்காதீங்கன்னு புத்திமதி சொல்லி அவுங்க ஆளுங்க கிட்டேயே டாக்டர் வாங்கிக் கட்டிக்கிட்டது அவங்களுக்குத் தெரியாமயா இருக்கும்..?

குடிக்கிறதுக்கு இப்படிலாம் நாங்க படுற பாடு இருக்கே ..அப்பப்பா... போராட்டமாவே போச்சுப்பா.இந்த அம்மா எங்க மேல இரக்கப்பட்டு சரக்கு வெலையையும் பார்க்காரன் கொள்ளையையும் கொஞ்சம் கொறைச் சாங்கன்னா புண்ணியமாப்போவும்ப்பா...நாங்களும்தானே
ஓட்டுப்போட்டிருக்கோம் '.










திங்கள், 8 ஏப்ரல், 2013

தென் கொரிய அன்பருக்கு நன்றி









Kallery.net என்ற தளத்தின் வாயிலாக தென் கொரிய நாட்டிலிருந்து அன்பர் ஒருவர் தொடர்ந்து எம் வலைப்பூவிற்கு வருகை தருகிறார்.

அந்த நண்பர் பணி  நிமித்தமாக தமிழகத்திலிருந்து தென்கொரியா சென்று குடியேறியவராக இருக்கலாம்.அல்லது அந்நாட்டின் குடிமகனாகக் கூட இருக்கலாம். எவ்வாறிருந்தாலும் அன்பரின் தொடர்ந்த வருகைக்கு எமது உளமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்.




அவர் மென்மேலும் வளமும் நலமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

எம்.ஜி.ஆரின் கடிகாரம் ஓடுகிறது












இங்கே நீங்கள் பார்க்கின்ற படங்கள் கடந்த மார்ச் மாதம்  22ஆம் நாளன்று எடுக்கப்பட்டவை. இடம் எதுவென தெரிகிறதா..?  ஆமாம் .அது எம்.ஜி.ஆரின் நினைவிடம்தான்.   சரி  இந்த மக்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரிகிறதா ?
அவர்கள் எம் ஜி.ஆரின் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிற 'டிக்,டிக்' ஒலியைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


எம்.ஜி.ஆர் மரணமடைந்த பிறகு  அவரது உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டு நினைவிடமும் எழுப்பப்பட்டது.அதன் பிறகு நினைவிடத்திற்குச் சென்ற மக்களுக்கு எவராலோ ஒரு செய்தி சொல்லப்பட்டது.


எம்.ஜி.ஆர் எபபோதும் அணிந்திருந்த அந்த பெரிய 'Rado' கைக்கடிகாரம் அவருடனேயே புதைக்கப்பட்டதாகவும் அது இன்னும் ஓடிக்கொண்டிருப்பதாக வும் சமாதியின் மீது காது  வைத்துக் கேட்கும்போது அது ஓடும் சத்தம் காதில் விழுவதாகவும் சொல்லப்பட்ட அந்த செய்தியை தாங்கள் எம்.ஜி.ஆரின் மீது கொண்டிருந்த அளப்பரிய அன்பால் மக்கள் நம்பினார்கள்.


என்ன அதிசயமோ அது,இந்தச் செய்தி தென்கோடித் தமிழகம் வரைக்கும் பரவி கடிகார ஒலியைக் கேட்பதற்காகவே மக்கள் சுற்றுலா கிளம்பினார்கள். சமாதியின்மீது தலை சாய்த்து காது கொடுத்துக் கேட்டவர்களும் 'டிக்டிக்'ஒலி கேட்பதாகவே சொன்னார்கள்.


அப்போது வடிவேலு சினிமாவுக்கு வந்திருக்க வில்லை. அதனால் அவருக்கும் இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்கவில்லை.


ஆனால் இப்போது .., அதாவது இந்தப் படங்கள் எடுக்கப்பட்ட நாளன்று   எம்.ஜி.ஆரின் சமாதியின் மீது படுத்து காது வைத்துக் கேட்டுவிட்டு ஒரு ஊர்க்கார மனிதர் 'ஆமா,சத்தம் கேட்குது' என்று சொன்னபோது ஒரு படத்தில் வடிவேலு ஒரு வெள்ளிகிழமையன்று  ஊர்க்காரர்களை எல்லாம் கூட்டி வைத்துக்கொண்டு மலை உச்சியில்  சாமியைக் காட்டிய காமெடிதான் நினைவுக்கு வந்தது.


அந்தக் காமெடியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..?  


ஆனாலும் எம்.ஜி.ஆரின் மீது இந்த மக்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கை   பிரமிக்க வைக்கிறது.சுனாமி ஏதும் வராதிருந்து இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப்பின் மெரினா இப்படியே மிஞ்சியிருந்தால் எம்.ஜி.ஆரின் சமாதி அப்போது ஒரு கோவிலாகக் கூடக்  கருதப்படலாம். 


அன்பையும் அஹிம்சையையும் போதித்த ஒரு மகா மனிதர் கர்த்தரானது போல,


தனது கொள்கைகளைச் செயலாக்குவதில் உறுதியாக இருந்த ஒரு போராளி இறைத்தூதர் ஆனதுபோல,


கொடிய வாழ்க்கையின் துயரங்களை உணர்ந்து ஆசாபாசங்களை விலக்கிய ஒரு புனிதர் புத்தர் ஆனது போல ,


காதலுக்காக உயிர் கொடுத்துத் தெய்வமான ' காத்தவராயன் 'போல , 


சாகசக் காரனாக வாழ்ந்து மறைந்து சாமான்ய மக்களின் காக்கும் தெய்வமான 'மதுரை வீரன் ' போல, 


ஊர் காத்த 'அய்யனார் ' போல , 'சுடலை மாடன் ' போல


மக்களின் மன ஓட்டத்தை எடை போட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றி மக்கள் நாயகனாகி வாழ்வில் வெற்றிகளையே சாதித்த எம்.ஜி.ஆரும் ஒரு தெய்வமாகி இருக்கலாம்.


அமானுஷ்ய சக்தி கொண்டதாக , அவருடைய கைக்கடிகாரம் அப்போதும் ஓடிக்கொண்டிருக்கலாம்.