வெள்ளி, 4 மே, 2012

பார்த்தோம்,,பகிர்ந்து கொள்கிறோம்


கதவுகள் இல்லாத கடைகள்  
மகாராஸ்ட்ராவில் சிர்டி அருகில் சனி சிங்நாபூர் என்ற புனித பூமியில் சனி பகவானின் கோவில் ஒன்று உள்ளது.புகழ் பெற்ற இந்த ஊரில் இருக்கும் வீடுகளுக்கும் கடைகளுக்கும் பழங்காலம் முதலாகவே கதவுகள் வைப்பதில்லை . எக்காலத்திலும் இங்கே திருட்டுப் போவதில்லை. எல்லாவற்றுக்கும் சனி பகவானின் மகிமையே காரணம்.

ஹைஜீனிக் கரும்புச்சாறு 
சிர்டியிலிருந்து சனி சிங்நாபூர் செல்லும் வழியில்  சாலை ஓரங்களில் கரும்புத் தோட்டங்கள் நிறைந்திருக்கின்றன. மரத்தாலான இயந்திரங்களை மாடுகளைக் கொண்டு இயங்கச் செய்து புத்தம்புதிதாக சுத்தமாக கரும்புச்சாறு எடுத்துத் தருகிறார்கள்.  





சாகரா என்ற கேரள வினோதம் 

கேரளக் கடலில் விளக்க இயலாத வினோதம் ஒன்று நிகழ்கிறது.திடீரென்று லட்ச்சக்கணக்கில் மீன்கள் கரை நோக்கி வருகின்றன.மீனவர்கள் வலையை வீசி அவற்றை அள்ளி எடுக்கிறார்கள்.எந்த வித முயசியும் இல்லாமல் நல்ல வருமானம் கிடைக்கிறது.கடவுள் தங்களின் மேல் பிரியம் கொண்டு தமக்குத தருகின்ற பரிசு இது என்று மீனவர்கள் கருதுகிறார்கள். இந்த அதிசய நிகழ்வு சாகரா என்று அழைக்கப் படுகிறது.



முதல் தெய்வம் 


தென் தமிழ் நாட்டின் குக்கிராமம் ஒன்றில் அம்மனுக்காகக் கட்டிய கோவிலில் நடுநாயகமாக செடி ஒன்று முளைத்து வளர்ந்து வருகிறது.செடியை அம்மனாக ஏற்றுக்கொண்டு மக்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகிறார்கள்.மரங்களே மனித குலத்தின் முதல் தெய்வம் என்பதை ஆதியிலேயே உணர்ந்து அவற்றை வழிபட்ட இனமல்லவா தமிழினம்!  











' பிளாஸ்டிக் உலகம் ' படிக்க சொடுக்குக .
http://thenpothikai.blogspot.in/2012/05/blog-post_3568.html


' உலகத் திரைப்பட அறிமுகம் ' படிக்க சொடுக்குக 
http://thenpothikai.blogspot.in/2012/05/blog-post_9903.html




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக