புதுக்கோட்டை வழியாக ரயில் பயணம் செய்தவர்களுக்கு அல்லது செய்பவர்களுக்கு படத்தில் இருக்கின்ற இந்த நாய் ஒருவேளை பரிச்சயம் ஆகியிருக்கலாம்.
எங்கோ வசிக்கின்ற இந்த நாய் சரியாக ரயில் வரும் நேரத்துக்கு ரயில் நிலையத்துக்கு வந்து விடுகிறது.ரயில் நிலையத்தில் நிற்கின்ற சில நிமிடங்களில் இது ஒவ்வொரு பெட்டியாகப் போய் இந்த மாதிரி உட்கார்ந்து கொண்டு 'ஏதாவது சாப்பிடக் கொடுங்களேன் 'என்பது போல மவுன மொழி பேசுகிறது.
நாய்க்கு அதிர்ஷ்டமும் அந்த நேரத்தில் சிற்றுண்டியோ அல்லது பிஸ்கட்டோ சாப்பிடுகின்ற நம்மவர்களுக்கு இரக்கமும் இருந்தால் அதற்க்கு ஏதேனும் கிடைக்கிறது.
கிடைக்கவில்லையானாலும் நாய் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறது..எல்லாம் நம்பிக்கைதான்.
யாரோ இரக்கப்பட்ட ஒரு ரயில் பயணி புண்ணியவான்தான் இந்த நாய்க்கு இந்தப் பழக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் .இல்லையா..?
புதுக்கோட்டை வழியாக ரயில் பயணம் போகிறீர்களா ? ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிப் போங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக