வியாழன், 15 நவம்பர், 2012

கவிதை-' சாமி மரம் '




கருக்கலில் காய்ச்சில் குருவி தேடிய 
ஒத்தை வீட்டுப் புளிய மரம் 

தாவடி கொப்பு விளையாடி 

காலை ஒடித்துக் கொண்ட 
கண்மாய்க்கரை வாகை மரம் 

பட்டப் பகலிலும் குகை போல 

நிழல் கருத்துக் கிடக்கின்ற 
கோயில் திடல் ஆலமரம் 

குரங்கொன்றைக் கண்டுபிடித்துக் 

கும்மாளம் போட்ட 
குளக்கரை அரசமரம் 

இது எதுவுமே 

இப்போது இல்லை 

மடைக்கரை ஆலமரத்தை 

மட்டும் 
வெட்டவிடாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் 
அதன் கீழே குடியிருக்கின்ற 
மடைக்கருப்பர் சாமி 


                                                                                                       அந்த சாமி மரம் 























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக