வெள்ளி, 25 ஜனவரி, 2013

பார்த்தோம்,பகிர்ந்து கொள்கிறோம் , -'வானம் பார்த்த பூமி'











தென்மேற்கு, வடகிழக்குப்

 பருவமழைகள் பாதை மாறிட

 பால் திரண்ட  நெல்மணிகள்

கழனியிலே காய்ந்து கருக

நீர் வறண்ட பொய்கையிலே

சேற்று மீன் பிடிக்கிறார்கள்

எம்மக்கள்.

தம் முறை வருமளவும்

கரையினிலே வாடிக் காத்திருக்கின்றன


கொக்குகள்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக