சைக்கிளிலிலோ பைக்கிலோ போய்க்கொண்டிருப்போம்.எதிரில் வருபவர் ஏதோ கேட்பார்.சரியாகக் கேட்காவிட்டால் வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்போம்.அவர் வழி கேட்பார் அல்லது முகவரி விசாரிப்பார்.அவருக்கு பதில் சொல்லுவோம்.
யாரோ கூப்பிடும் குரல் கேட்கும்.சட்டென்று நின்று திரும்பிப் பார்ப்போம்.ஒரு சுமையைத் தூக்கி வைக்க ஒருவர் உதவி கேட்பார். இறங்கிச் சென்று உதவுவோம்.அல்லது வழியில் ஏதோ ஒரு இடத்தில் இறங்கிக் கொள்வதாகச் சொல்லி லிப்ட் கேட்பார்.ஏற்றிச் செல்வோம்.
தெருவில் உணர்ச்சிமயமாக ஒருவன் கைகளை வீசி வீசி தானே பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் போவான்.'பாவம் பைத்தியக்காரன் 'என்று பரிதாபப் படுவோம்.
இதெல்லாம் பழைய கதை ஐயா .
இப்போது நிலைமையே வேறு.
எதிரில் வருபவர் ஏதோ கேட்டாரே என்று வண்டியை நிறுத்தி அவரிடம் விசாரித்தீர்கள் என்றால் ஒன்று உங்களை முறைப்பார் அல்லது கிண்டலாகச் சிரிப்பார்.ஏனென்றால் அவர் மனைவியிடம் ப்ளூடூத் வழியாக செல்போனில் பேசிக்கொண்டு வருகிறார் ஐயா .
யாரோ கூப்பிடுகிறார்களே என்று மெனக்கெட்டு நின்று திரும்பிப் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் மொக்க பார்ட்டி .அங்கே நிற்பவர் எங்கோ தன்னுடைய தொழில் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியனுக்கு உத்தரவு போட்டுக் கொண்டிருக்கிறார் சார்.
தெருவில் தனக்குத் தானே பேசிக்கொண்டு போகிறவனைப் பார்த்து 'பைத்தியக்காரன்' என்று பரிதாபப் பட்டீர்கள் என்றால் உங்களை பார்த்து எல்லோரும் பரிதாபப் படுவார்கள். அவன் தன்னுடைய நண்பனோடு அல்லவா ப்ளூடூத்தில் ஜாலியாகப் பேசிக்கொண்டு போகிறான்.
நிலைமை இப்போது இப்படியாகிப் போனதால் உண்மையிலேயே வழி கேட்பவரையும் முகவரி விசாரிப்பவரையும் மக்கள் அலட்சியம் செய்து தன வழியே போய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஏதோ அவசரத்துக்கு உதவிக்கு அழைக்க கூப்பாடு போட்டவர் கவனிப்பார் யாருமின்றி கத்திக் கத்தி ஓய்ந்து போகிறார்.
தன்னோடு தானே பேசிக்கொண்டு போகின்ற பைத்தியக்காரன் தன்னைச் சுற்றியுள்ள எல்லோருமே தன்னைபோலத்தான் இருக்கிறார்கள் என்று திருப்தியடைகிறான்.
எல்லாம் காலத்தின் கோலம். வேறென்ன ..?.
உலக சினிமா அறிமுகம் -'Not one less' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/07/not-one-less.html
' என்ன ஒரு அற்புதம் ..? ' படிக்க சொடுக்குக
http://thenpothikai.blogspot.in/2012/08/blog-post_30.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக